கூட்டமைப்பினர் விட்ட கூத்தில தமிழ் மக்கள் ஏலம் போடப்பட்டுள்ளனர். தமிழர்களுக்கு தமிழர்கள்தான் எதிரி… தமிழ் வேட்பாளர் ஒருவர் போட்டியிட்டும் அவருக்கு ஆதரவு வழங்காத கூட்டமைப்பு இருந்தால் என்ன இறந்தால் என்ன!!! சாணக்கியத்தனமில்லாது, இன்னுவரை தமிழர்கள் இழந்த இழப்புக்களுகஇக இலங்கை அரசல்ல கூட்டமைப்பினரே பொறுப்பேற்க வேண்டும். கிடைத்த நல்ல சந்தர்ப்பத்தையும் கோட்டைவிட்டு கும்பிடுபோடப்போகின்றார்கள் முட்டாள்தனமாக… பாவம் சிவாஜிலிங்கம் அவர்கள்… தன்னை தமிழர்களுக்காக அர்ப்பணித்ததில் சுயநலம் இருந்தாலும் தமிழர்களால் அவர் ஒதுக்கப்பட்டதில் புலிகளும் அவரைக் கைவிட்டதாகவே தெரிகின்றது. அவர்கள் கூட இவருக்கு ஆதரவு வழங்கவில்லை என்பதே மனவருத்தமாக இருக்கின்றது. புலதடவை எனது ஆக்கங்களில் எழுதிய ஆக்கபூர்வமான தகவல்களை சற்Nனும் கண்காணித்திருந்தால் மக்கள் சற்றேனும் மூச்சு விடகூடியதாக இருந்திருக்கும். இனி தமிழ் கூட்டமைப்பு என்ன செய்யப்போகின்றார்கள்… இனி மகிந்தவின் வாலைப்பிடிக்கப்போகின்றார்களா??? அல்லது காலில் இருந்து மிதிபடப்போகின்றார்களா??? தலைநிமிர்ந்து தமிழனை வெல்லவைக்க முடியாவிட்டாலும், அவருக்கான ஆதரவையே கொடுத்து, தமிழர்களின்பலத்தை காட்டி மகிந்தவை பயமுறுத்தியிருக்க முடியும் அதைக்கூட செய்யாதவர்கள் இனி என்னள செய்யப் போகின்றார்கள். அரசு சாதாரணமாக மேற்கொள்கின்ற விடயத்தை ஒப்பந்தம் செய்கின்றார்களாம்… என்ன முட்டாள்தனம்.
Nessun commento:
Posta un commento