அனைத்து ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும்
எமது இயக்கத்தின் அனைத்து அதிகாரபூர்வ அறிக்கைகள், வெளியீடுகள் யாவும் எமது அதிகாரபூர்வ இணையத்தளமான lttepress.com இணையத்தளத்திணூடக மட்டுமே வெளிவரும் என்பதை தெரிவிப்பதோடு.
மேலும் 19.05.2009ன் பின்பு எமது தாயகத்தில் ஏற்பட்ட சோகமான அனர்த்தத்தின்
காரணமாக தற்காலிகமாக இயங்காதிருந்த மாவீரர்பணிமனை, ஆவணக்காப்பகம், தொடர்பகம் ஆகிய எமது முக்கிய அங்கங்கள் 08.01.2010 தொடக்கம் செயற்படும் என்பதை எமது மக்களுக்கும் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் அறியத்தருகிறோம்.
எமது அதிகாரபூர்வ செய்திகளை பெற எமது இணையத்தளத்திணூடகவோ அல்லது lttepress@gmail.com இணைய மின்னஞ்சல் ஊடகவோ தொடர்புகொள்ளலாம்.
நன்றி
தமிழீழ விடுதலைப்புலிகள்
தலைமைச் செயலகம்
தமிழீழம்
காலங்கடந்தும் கண்ணியமாக வெளிவந்துள்ள தங்கள் செயற்பாடுகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட எமது வாழ்த்துக்கள்.
தேவையற்ற வீணர்களின் செயல்களை தகர்த்தெறியவும் தாங்கள் தங்களை முறையாக வெளிப்படுத்தவும் வேண்டுகின்றோம்.
இப்போதுதான் இணையத்தை யார் வேண்டுமென்றாலும் எப்படி வேண்டுமென்றாலும் எங்கு வேண்டுமென்றாலும் ஆரம்பிக்கலாமே... இது உத்தியோக பூர்வ இணையம் என்பதனை எவ்வாறு இவர்கள் நிரூபிக்கப்போகின்றார்கள். பொறுத்திருந்தே பார்ப்போம். எனினும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எமது வாழ்த்துக்கள்.
Thesiyam அமைப்பின்சார்பில்;,
திரு அருகன்
(ஈழத்தமிழ் எழுத்தாளரும், ஒருங்கிணைந்த புதிய தலைமுறை ஒன்றியத்தின் சர்வதேச ஆலோசகரும்,
இத்தாலியின் வெளிநாட்டவர்களுக்கான வீசா மற்றும் ஆவணங்கள் தொடர்பான அலுவலக அதிகாரியும் )
Nessun commento:
Posta un commento