தந்தாய்!!! நீ தந்தாய் உன் தனையனை இவ்வுலகிற்கு
தானைத்தலைவனால், தலைநிமிர்ந்ததே உன் தமிழினம்!!!
அதனால் அவ்வினம் போற்றிப்புகழ்கின்னதே உன்னை…
மரணந்தீண்டா மாவீரனைத்தந்ததால் நீயும் மாவீரன்தான்… !!!
இறப்பினும் நீவாழ்வாய் சிறப்பிலும் நீவாழ்வாய்…!!!
தள்ளாத வயதிலும் தளராத வீரத்தோடே தடுப்பு முகாமில்
தமிழர்களுக்காய் தலைகொடுத்த தெய்வம் நீ…
கூடுவிட்டு உயிர்பிரிந்தாலும் நாடுவிட்டு
நாம் நினைவுகொள்ளும் நல்தெய்வம் நீயய்யா!!!
கண்ணீர்விட்டு நாம் கலங்கும் பெருவெள்ளம்
நாளை உன்பாதத்திற்கு மலரும் ஈழம் சமர்ப்பணமாகும்.
தேசியம் ஆசிரியர் குழு-
Nessun commento:
Posta un commento