domenica 31 luglio 2011

ஊளையிடும் தமிழ் அரசியல் வாதிகளளே!!!

ஊளையிடும் தமிழ் அரசியல் வாதிகளளே!!!

“சாணக்கியம் என்பது, அரசியலின் ஆணிவேர், முற்போக்கென்பது ஆட்சியின் அத்திவாரம்…” – அருகன்

pim2பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பாக ஊளையிடுவதை விடுத்து, புலம்பெயர்ந்தும் வாழும் ஈழத் தமிழர்கள் இலங்கைப் பிரஜைகளே என்பதனைக் கருத்தில் கொண்டு அவர்களும் வாக்குப் போடும் உரிமையினையும் அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்தாலே பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இருப்பதைவிட கூடுதலாகப்போடவேண்டிய கட்டாயம் அரசிற்கு ஏற்படும் அல்லாவா? மக்கள் தொகையினை வைத்து  பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறைக்க எத்தணிக்கும் அரசின் வழியிலேயே மக்கள் தொகையினை அதிகரித்துக்காட்டி மக்களின் பிரதிநிதிகளை வெளிப்படுத்தலவாமே!

lunedì 25 luglio 2011

“ஒரு அடிமட்டத்தமிழனுக்கு பாதம் வலிக்கும் போது, உயர்மட்ட அரசியல் வாதிக்கு எப்போது மண்டை வலிக்கின்றதோ, அப்போதுதான் தமிழர்களுக்கு உரிமை கிடைக்கும்…” – அருகன்

மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சாம்…

sellva1“ஒரு அடிமட்டத்தமிழனுக்கு பாதம் வலிக்கும் போது, உயர்மட்ட அரசியல் வாதிக்கு எப்போது மண்டை வலிக்கின்றதோ அப்போதுதான் தமிழர்களுக்கு உரிமை கிடைக்கும்…”

சபாஸ்… தமிழரசுக்கட்சி அமோக வெற்றி… கேட்பதற்கு சந்தோஷமாகத்தான் இருக்கின்றது. அதிகாரத்தைக்கையில் எடுக்கும் முன் சற்றுச் சிந்திக்க வேண்டியப ல விடயங்களும் இருக்கத்தான் செய்கின்றது என்பதனை ஐயா சம்மந்தன் அவர்களும் மற்றும் தமிழ் தலைவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

எனது முன்னைய எழுத்துக்களில் அழுத்தம் திருத்தமாகச் சொன்ன விடயங்களைக் கூட மேலோட்டமாகச் செய்வதில் சிரமங்காட்டுவோர் எப்படி தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கப்போகின்றார்கள் என்று புரியவில்லை.

எப்போது, “ஒரு அடிமட்டத்தமிழனுக்கு பாதம் வலிக்கும் போது உயர்மட்ட அரசியல் வாதிக்கு மண்டை வலிக்கின்றதோ அப்போதுதான் தமிழர்களுக்கு உரிமை கிடைக்கும்…” எனக்கு இப்போது வயிறு வலிக்கிறது யாராவது அரசியல் வாதிகளுக்கு பாதங்களாவது எரிகின்றதா என்று கேட்கத் தோன்றுகின்றது.