martedì 24 agosto 2010

பிரபாகரன் மறைந்திருந்த இடத்தைக் கண்டு பிடித்தது எவ்வாறு? சிங்கள இணையம் பரபரப்புத் தகவல் tamil.cnn

 

 

புதன், 25 ஆகஸ்ட் 2010 04:53

பிரபாகரன் மறைந்திருந்த இடத்தைக் கண்டு பிடித்தது எவ்வாறு? சிங்கள இணையம் பரபரப்புத் தகவல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணத்திற்கு தனது எதிரணியினரான கஸ்ரோ குழுவினரே காரணம் என கே.பி.என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் கூறிய போதிலும் கே.பியின் அறிவிப்பொன்றின் மூலமே பிரபாகரன் மறைந்திருந்த இடத்தை கண்டு பிடிக்க முடிந்ததாக இராணுவத்தின் உயர் மட்டத் தரப்பு தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள இணையத் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பிரபாகரன் உயிரிழந்து விட்டதாகவும் இதனால் யுத்தம் முடிவடைந்து விட்டது என 2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி இராணுவத் தலைவர்கள் ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தனர்.

மே 16ஆம் திகதி அதிகாலை இராணுவப் பாதுகாப்பு அரண்களை உடைத்துக் கொண்டு செல்லும் நோக்கில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலின்போது, தீப்பற்றி எரிந்த அம்புலன்ஸ் வண்டியில் இருந்த சடலம் பிரபாகரனுடையது என படையினர் எண்ணியதே படையினர் யுத்தம் முடிபடைந்து விட்டதாக அறிவித்ததற்கு காரணமாகும் எனவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்தின் இந்த அறிவிப்பை நிராகரித்த கே.பி.17ஆம் திகதி பிரபாகரன் தன்னுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் அவர் இன்னும் உயிருடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட புலனாய்வுத்துறையினர் அன்றை தினம் மேற்கொள்ளப்பட்ட செய்மதி தொலைபேசி உரையாடல் குறித்து விசாரணை நடத்தியதுடன் பிரபாகரனின் தொலைபேசி இருந்த இடத்தை கண்டறிந்தனர்.

இதன் பின்னரே பிரபாகரன் மறைந்திருந்ததாகக் கூறப்படும் நந்திக்கடல் பகுதி மீது படையினர் தாக்குதல் நடத்தினர். செய்மதி தொலைபேசி இருக்கும் இடத்தை கண்டறியும் தொழில்நுட்பம் அமெரிக்காவினால் இலங்கை இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டிருப்பதை விடுதலைப்புலிகள் அறிந்திருக்கவில்லை.

கே.பி., பிரபாகரனுடன் தனக்கு தொலைபேசி தொடர்பிருப்பதாக காட்டி தலைமைத்துவப் பதவியை பெற முயற்சித்துள்ளதாக இராணுவத்தரப்பு தகவல்கள் தெரிவித்தன. என்று அந்த இணையம் தெரிவித்துள்ளது.

பிரபாகரன் மறைந்திருந்த இடத்தைக் கண்டு பிடித்தது எவ்வாறு? சிங்கள இணையம் பரபரப்புத் தகவல்

giovedì 19 agosto 2010

சிவந்தனை வரவேற்கத் தயாராகும் சுவிஸ் வாழ் தமிழ் மக்கள்!/ சிவந்தனின் நடை பயணத்திற்கு செலவாகும் பணத்தினை வன்னி மக்களுக்கு கொடுத்தால் உதவியாகும்!! (nanri inaiyankal)

 சிவந்தனை வரவேற்கத் தயாராகும் சுவிஸ் வாழ் தமிழ் மக்கள்!/ சிவந்தனின் நடை பயணத்திற்கு செலவாகும் பணத்தினை வன்னி மக்களுக்கு கொடுத்தால் உதவியாகும்!!

 

ஈழத் தமிழருக்கு நீதி வேண்டும் என்று கோரி பிரித்தானிய தலைநகர் லண்டனில் இருந்து சுவிற்சலாந்தின் தலைநகர் ஜெனிவாவில் அமைந்திருக்கும் ஐ.நா மனித உரிமைகள் சபையை நோக்கி மனம் தளராத உறுதியுடன் சிவந்தன் இன்றோடு 27 வது நாளாக நடை பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

mercoledì 11 agosto 2010

இத்தாலி அரசிடம் தமிழர்கள் பலர் கடனாளிகளாக மாறிக் கொண்டிருக்கின்றார்கள்!!!

நிகழ்கால அறியாமை எதிர்காலத்தை அழித்துவிடுகின்றமைக்கான ஆதாரங்கள் இவைதான்… 

Soldi € அண்மையில் எம்மால் மேற்கொள்ளப்பட்ட புதிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பரிசீலனைகள் சிறந்த பெறுபேறுகளை எட்டியுள்ளது. இச்சேவைமூலம், பலர் தமக்குத் தெரியாலேயே இத்தாலி அரசிடம் கடன்பட்டுள்ளமை இத்தால் வெளிக் கொணரப்பட்டுள்ளன. இக்கடன் உரிய பெறுமதியிலிருந்து கட்டப்படாத காலத்திற்கேற்ப வட்டியுடன் அதிகரித்துச் செல்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதன் அறியாமையால் ஒவ்வொரு தனிநபரும் தாம் தமது எதிர்காலத்திற்காக சேமித்துக்கொண்டிருக்கும் ஓய்வூதியப்பணத்தினை இத்தாலி அரசிடம் அடைமானம் அவைப்பது புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. எனவே மேலும் இது தொடர்பாக விபரம் அறியாதவர்கள் தம்முடைய நிலைகளை அறிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.

domenica 8 agosto 2010

உங்களுக்குத் தெரியுமா உங்கள் நிலை!!!!!?????

உங்களுக்குத் தெரியுமா உங்கள் நிலை!!!!!?????
இத்தாலியில் அவ்வப்போது பல சட்டமாற்றங்கள் இடம்பெறுவது சர்வசாதாரணமாகிவிட்டது. எனினும் பல வெளிநாட்டவர்கள் அச்சட்ட மாற்றங்களை குறிப்பாக தமிழர்கள் அவற்றை அறியாதிருப்பது ஒருவகை, அறிந்தும் வெளிப்படுத்தாதது இன்னொரு வகை, வெளிவந்தவற்றை அரைகுறையாக அல்லது மாற்று விபரமாக வெளியிடுவது பிறிதொரு வகை… இது இப்படி இருக்க இவ்வாறான சட்டமாற்றங்களின் பாதிப்புகளை உணராமலேயே பலர் காலத்தைக்கடத்துகின்றனர். இதனால் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதிலும் பார்க்க நன்மைகளைக்கூட பெற்றுக்கொள்ளாது சட்டம் மாற்றத்திற்குள்ளாகிழவிடுகின்றது. எனவேதான் அவ்வப்போது என்னால் முடிந்தளவு எனது இணைய வாசகர்களுக்காகவும் என்னிடம் தமது தேவைகளைப் பூர்த்தி செய்ய முனைவோர்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் எனது சேவைகளை மேற்கொண்டு வருகின்றேன். இந்தவகையில், தற்போது புதிய நடவடிக்கையினை எடுத்துள்ளேன். அதுவாகில், பல வருடங்களாக இத்தாலியில் தொழில் புரிந்தும் தாம் எவ்வளவு தொகை தமது ஓய்வூதியப்பணத்தை அரசிடம் வழங்கியுள்ளார்கள் என்பதனையும் அதுதொடர்ர்பாக எடுக்க வேண்டிய மற்றைய ஒழுங்குகளையும், இன்னும் தொழில் வழங்குனர் தொடர்பான பரிசீலனைகளையும் பெற்று அதற்கேற்ப உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியம் பலருக்குப்புரியாது போய்விடுகின்றது. எனவே இது தொடர்பான பரிசீலனைகளை மேற்கொள் தேவை ஏற்படின் தொடர்பு கொள்ளவும்…

அலுவலக மெயில் தொடர்புகளுக்கு arugan@live.com;

அரசாங்க அலுவல்களுக்கு மட்டும். :- maximin.francis@PostaCertifica.gov.it

venerdì 6 agosto 2010

தமிழன் என்கிற காரணத்தால் பிணமாக ஆக்கப்பட்டேன் ! குற்றுயிர் போல் வாழும் ஒரு அப்பாவியின் குமுறல்

 

”தமிழனாக பிறந்த ஒரே ஒரு காரணத்தாலேயே நான் கடந்த இருபது வருட காலமாக குறை உடலும் குற்றுயிரும் உடையவர் போல் வாழ்ந்து வருகின்றேன்.

” இப்படிக் கண்ணீரும் கம்பலையுமாக கூறினார் அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளிப் பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட 11 ஆம் கிராமத்தைச் சேர்ந்த ஆண்டிப்பிள்ளை பிள்ளையான் தம்பி (வயது 35 ). நான்கு பக்கமும் முற்புதர்கள் சுற்றியிருக்க நடுவில் சிறிய குடிசையில் வயதான தாயுடன் ஏதோ வாழ்ந்து வருகிறார் இவர்.

15 வயதுச் சிறுவனாக 1990 ஆம் ஆண்டு அவரது வாழ்க்கையின் வசந்தம் தொலைந்து போனது. தமிழீழ விடுதலைப் புலிகள் என்கிற சந்தேகத்தில் இராணுவத்தினர் அவரை இடுப்புக்கு கீழ் சுட்டார்கள். அவர் சிகிச்சைக்காக அம்பாறை, கண்டி, கொழும்பு ஆகிய இடங்களிலுள்ள அரச வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டார். அவரது உயிர்தான் காப்பாற்றப்பட்டது.

ஆனால் இடுப்புக்கு கீழ் அவருக்கு உணர்வு இல்லாத நிலை. இரண்டு கால்களும் இயக்கம் இழந்து விட்டன. அவர் கிட்டத்தட்ட வாழ்க்கையில் எல்லாவற்றையுமே இழந்து விட்டார். வாழ்க்கையையே தெலைத்து விட்டார். அன்று முதல் இன்று வரை அம்மாவில்தான் தங்கி வாழ்கின்றார். மலசலத்தைக் கூடக் கட்டிலில் படுத்திருந்தவாறே கழிக்க வேண்டியவராக உள்ளார்.

வயது போன தாயார்.... தாயாரை பராமரிக்க வேண்டிய வயதில் மகன். ஆனால் தாயார் தொட்டாட்டு வேலைகளைச் செய்தும், பிச்சை எடுத்தும் மகனைக் காப்பாற்றி வருகின்றார் இவருக்கு பெரிய அபிலாஷை எதுவும் இல்லை. ஒரு இடத்தில் அமர்ந்து இருந்து நிரந்தர தொழில் செய்து அம்மாவைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் அந்த ஆசை.

ஆனால் எமது சமுதாயமும், சட்டமும் அவருக்கு எதிராகவே இருக்கின்றன. சுயதொழில் செய்ய வேண்டும் என்கிற உந்துதலால் நிறுவனம் ஒன்றின் மூலமாக மூன்று டயர் மோட்டார் சைக்கிள் ஒன்றை பெற்றுக் கொண்டார். கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சோமசுந்தரம் புஷ்பராசா இவரின் உள்ளக் கிடக்கையைப் புரிந்துகொண்டு சுயதொழில் முயற்சி ஒன்றை இவர் ஆரம்பிக்கும் வகையில் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை அன்பளிப்பாகக் கொடுத்து உதவினார்.

புஷ்பராசாவின் ஆசிர்வாதத்துடன் ஐஸ்பழம் விற்கும் தொழிலில் ஈடுபடத் தொடங்கினார். ஆனால் இவரால் சுத்தமாக இருக்க முடியாது என்று காரணம் காட்டி அதிகாரிகள் இத்தொழிலில் ஈடுபட விடாமல் தடை போட்டு விட்டனர். பக்கத்து ஊர் சந்தை ஒன்றில் புகையிலை வியாபாரத்தைத் தொடங்கினார்.

ஆனால் அவ்வியாபாரத்தில் ஈடுபடுகின்றமைக்கான அனுமதியும் மறுக்கப்பட்டது. இவர் மூன்று டயர் மோட்டார் வண்டியில் வீதியால் பயணிக்கும்போதெல்லாம் பொலிஸார் வாகன சாரதி அனுமதிப் பத்திரம் கேட்கின்றார்கள். வாகன அனுமதிப் பத்திரம் இல்லை என்று காரணம் காட்டி இவரை ஒரு முறை நீதிமன்றம் வரை இவரைக் கொண்டு போனார்கள்.

தமிழன் என்கிற காரணத்தால் பிணமாக ஆக்கப்பட்டேன் ! குற்றுயிர் போல் வாழும் ஒரு அப்பாவியின் குமுறல்

NANRI - TAMILCNN

giovedì 5 agosto 2010

நாடுகடந்த அரசு இலங்கை அரசின் சதிவலைக்குள்… - அருகன்.

நாடுகடந்த அரசு இலங்கை அரசின் சதிவலைக்குள்… - அருகன்.

இந்த சாணக்கியமான வரிகள் முடிவிற்கு வரும் முன்னரே பலர் இதன் தலைப்பை வைத்து ஒரு முடிவிற்கு வந்திருப்பார்கள்… அது தமிழர்களின் குணம்! எனவே, அதில் தப்பில்லை… பகுத்தறிவாளன் நிச்சயம் பகுத்தாய்ந்தே ஆவான். தமிழர்களில் அதிகமானோர் பகுத்தறிவாளர்களே ஆனால் அவர்கள் தம்மை இந்த அரசியலிலோ அல்லது போராட்டத்திலோ இருந்து ஒதுக்கிக்கொண்டதும், ஒதுக்கப்பட்டதுமான விளைவே இன்றைய தமிழீழத்தின் நிலை இவ்வாறு காணப்படுகின்றது என்பது மறுக்க முடியாத உண்மைகள்.

இப்போது உட்செல்வோர் தொடரட்டும்…

நடந்து முடிந்தவற்றைச் சொல்லி மார்தட்டுவதிலும் பார்க்க, நடந்து முடிந்தவற்றைப்பற்றிய மீழ்பார்வையில் கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினைகளே தற்போது தமிழர்களுக்கு அதிகம் இருக்க வேண்டும்.

அந்த வகையில், நாடுகடந்த அரசினை மக்கள் மலைபோல் நம்பியிருந்தனர்… ஆனால் அதன் அறிக்கைகளும், செயற்பாடுகளின் ஸ்தம்பித்த நிலையும், செயற்பாடுகளை மேற்கொள்ளும் போக்கும் பலத்த சந்தேகங்களை எழுப்பத்தான் செய்கின்றது. இலங்கை அரசின் கைக்கூலிகள் என்று இன்றுவரை நாம் நினைத்திருந்தவர்கள் வெறும் பொம்மைகளே என்றும், எமக்காக செயற்படுவோர்கள் என்று கருதியவர்கள் அடிப்படைச் சூத்திரதாரிகள் என்பதும் மெல்ல, மெல்ல வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இவ்வாறான விடயங்களுக்கு நாடுகடந்த அரசு விடுகின்ற அறிக்கைகள் மேலும் மேலும் அவ்வாறானவர்களை திடப்படுத்துவதாகவும், அவர்கள் செயற்பாட்டை உறுதிப்படுத்துவதாகவும் இருக்கின்றது. இவ்வாறான செயற்பாட்டிற்கு புலத்து ஊடகங்களும், திடீர் இணையங்களும் பெரும் ஆதரவளிப்பது “தேசியத் தலைவரின்” இத்தனை கால போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவதாக அமைகின்றது.

சரி ஆதாரத்தோடே உற்று நோக்குவோம். இரண்டு வருடங்களை அண்மிக்கப்போகும் முள்ளிவாய்க்கால் பேரவலம், ஆழிப்பேரவலத்திலும் பார்க்க மிக வேகமாகவே ஓய்ந்து போனது… போர்க்குற்றங்கள் தொடர்பாக புலத்து தமிழர்களின் ஆதங்கத்தை இலங்கை தமிழ் தலைமைகள் முறியடிப்பது தெரிந்தும் நாடுகடந்த அரசின் செயற்பாடுகளும் அறிக்கைகளும் கண்டனங்களும் அணுவளவேனும் நகர மறுக்கின்றது.

“தமிழ்வின்” போன்ற இணையங்கள் இப்போதெல்லாம் அதிகம் இலங்கை அரசியல் வாதிகளின் அல்லது இலங்கை அரசில் அங்கம் வகிக்கின்ற தமிழ் பிரமுகர்களைப்பற்றியே அதிகம் எமுதித்தள்ளுகின்றனர். இதன்மூலம் தேசியப்பற்றாளர்கள் மழுங்கடிக்கப்படுகின்றனர். ஆனால் தேசியத்திற்காக தன்னுயிரை கொடுக்க முன்வந்த போது தெரியாத இளையோனை அவனிடம் கிடைக்கப்போகும் பல்லாயிரம் நிதிக்குப்பின்னர் கண்தெரிகின்ற அவலமும் இருக்கத்தான் செய்கின்றது.

நாடுகடந்த அரசினை ஆரம்பித்த கேபி தற்போது நாடுகடந்த அரசைப்பற்றிப்பேசாது அவ்வரசிற்கு முரணான செவயற்பாடுகளை மேற்கொள்வதும், பேச்சுக்களை வெளியிடுவது தெரிந்தும் நாடுகடந்த அரசின் அங்கத்தவர்கள் வாளாவிருப்பதும், கேபிக்கும் தமக்கும் தொடர்பில்லை என்ற விமர்சனங்களும், எதை வெளிக்காட்டுகின்றன… சிங்கள பிரதி அமைச்சரின் செயலை அனைத்து தமிழ் ஊடகங்களும் தூக்கிப்பிடித்து அதை ஒரு முன்பக்கச் செய்தியாக்க முனையும் போது இலங்கை அரசானது தனது சாணக்கியக்காய்களை தமிழர்களுக்கு எதிராக அதிக வேகமாக நகர்த்தி செய்கின்றதை நாடுகடந்த அரசின் அறிவாளிகள் எவ்வாறு கைக்கொண்டனர்??? தேசப்பற்றாளர்களின் ஒவ்வொரு அடிகளையும் நாடுகடந்த அரசின் பெயரில் மற்றும் ஒருசில அமைப்புக்களின் முனைப்பால் முறியடிப்பதனைப்பார்க்கும் போது, நாடுகடந்த அரசின் செயற்பாட்டாளர்கள் விழித்துக்கொள்ளாது இன்னமும் தூங்கிக் கொள்வது சாத்தியமா?

எமது புலத்து போராட்டங்கள் அனைத்தும் கேபியின் வாக்குமூலத்தால் சின்னாபின்னமாக்கப்பட்டுவிட்டதை இன்னமும் தமிழர்கள் உணரவில்லைப் போலும். இத்தனை காலமும் கருணாவை ஒரு பொருட்டாக மகிந்த தன்னருகே வைத்திருந்ததை இப்போதும் நாம்புரிந்து கொள்ளாவிடில், எம்மால் எதையுமே புரிந்து கொள்ள முடியாது போய்விடும். இதில் இருந்து ஒரு விடயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும் கேபி புலிகள் அமைப்பில் இருந்து விலகியதாக அவர் கொடுத்த வாக்கு மூலம் மற்றும் கருணா பிள்ளையான் போன்றோர் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்ததன் காலத்தின் நினைவுகள் எதனை தெளிவு படுத்துகின்றது???? இதன் பின்னர் போர்மீது போர்தொடுத்து தோல்வி கண்ட இலங்கை அரசு ஒரே பிடியில் புலிகளை முடக்கியதன் பின்னணி!!! இத்தனை காலமும் சர்வதேசத்திற்கு தண்ணிகாட்டி பிடிபடாத கேபி இப்போது மட்டும் எப்படி பிடிபட்டார் என்று யாரும் சிந்தித்ததாகத் தெரியவில்லையே!!! இன்றுள்ள இந்த நிலைக்காக நாம் இழந்த தளபதிகளைச் சற்று எண்ணிப்பார்த்தாக வேண்டும்.

இன்றுவரை காத்திரமான ஒரு செயற்பாட்டை எங்கள் நாடுகடந்த அரசு வெளிக்காட்டவில்லை! ஆனால் இலங்கை அரசானது தனது போர்க்குற்றங்களை முறியடிப்பதற்கு புலிகள் அமைப்பின் முக்கிய தளபதிகளை வைத்தே சீர்செய்து வருகின்றது. அதே புலிகளின் பலிகளை வைத்தே போர்க்குற்றத்தை வெளிக்காட்ட நாம் முனைந்து கொண்டிருக்கின்றோம். எங்கள் அடிப்படைத்தவறு தமிழர்களின் ஒற்றுமையின்மை என்றே எல்லாரும் நினைத்து வருகின்றார்கள் ஆனால் அது வல்ல உண்மை!!! ஆரம்ப காலத்தில் புலிகளின் பலத்தை அளவுக்கு மீறி வெளிக்காட்டி சிங்கள அரசை பலமடையச் செய்தோம், இப்போது, தமிழர்களின் செயற்பாட்டை மழுங்கடித்து சிங்கள அரசை பிரபல்யப்படுத்திக்கொண்டு இருக்கின்றோம். அதுவே எமது இழப்பிற்குக்காரணம். ஒரே தளம், ஒரே தலைமை, இத்தனையும் அறிவும் ஆற்றலும் உடைய ஜனநாயகத்தால் கட்டப்பட வேண்டும். ஆழுக்கொரு அரசியல், ஆழுக்கொரு தலைமை, ஆழுக்கொரு கட்சி… ஆனால் கொள்கைமட்டும் ஒன்றாம்!!!

இலங்கை அரசு போரில் மட்டும் வெற்றி பெறவில்லை, தமிழர்களைப் போலியாக்குவதிலும் வெற்றி கண்டுகொண்டிருக்கின்றது. இலங்கை அரசு பயிற்சிகளையும் மண்டைச் சலவையினையும் முன்னாள் புலிகளுக்கு வழங்கி ஒரு பலத்த இறுக்கமான தமிழ்க் கட்டமைப்பை தனது ஆட்சிக்குள் உருவாக்கிவருகின்றது. ஆனால் தமிழர்கள் புலத்தில் செயலற்று, பயிற்சியற்ற செயற்பாடுகளால் இலங்கை அரசிற்கு தெரிந்தோ தெரியாமலோ சர்வதேச ரீதியில் பலத்த ஆதரவையே வழங்கி வருகின்றார்கள். ஓவ்வொரு தடவையும் தமிழர்களுக்கு கிடைக்கின்ற மிகப்பலமான சந்தர்ப்பங்களை நாமே நாசமாக்கி வருகின்றோம். எமது ஊடகங்கள் மற்றும் தமிழ் அமைப்புக்கள் சிங்கள அரசை அதாவது மகிந்த அரசை முறியடிப்பதில் அக்கறை காட்டும் அளவிற்கு தமிழர்களின் இழப்புக்கள் மீதும், உரிமைகள் மீதும் அக்கறைகாட்டத்தவறியே வருகின்றனர். இலங்கை அரசு தமிழர்கள் தொடர்பாக வெளியிடும் தகவல்கள் ஒருபுறமும், தமிழர்கள் வெளியிடும் தகவல்கள் மறுபுறமாகவும் ஒன்றுக்கொன்று முரணானதாகக் காணப்படுகின்றமை கேலிக்கிடமாக உள்ளது.

கேபியிடம் நிதி மற்றும் கப்பல்கள் போன்ற சொத்துக்கள் இருப்பதை உறுதிப்படுத்துகின்ற போதிலும் கேபி அதற்கு முரணான பதிலைக்காட்டி தமிழர்களை கோமாளியாக்குவதனை என்னவென்பது? கருணாவின் சர்வதேச வாக்குமூலத்திலும் பார்க்க கேபியின் சர்வதேச வாக்குமூலம் மிகவும் சக்தி வாய்ந்தது என்பதனை மகிந்த அறிவுபூர்வமாகத் தெரிந்த காரணத்தாலேயே கருணாவிற்கு பிரதி அமைச்சும் சர்வதேச குற்றவாளியாக்கப்பட்ட கேபிக்கு விடுதலையுடனான பாதுகாப்பும் வழங்கியிருக்கின்றது.

ஒரு வேளை கேபி பிடிபடாது இருந்தால் கருணாவிற்கு மீண்டும் அமைச்சுப்பதவியே கிடைத்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் எனக்கில்லை அதை வைத்து அவர் தமிழர்களுக்கு என்ன செய்யப்போகின்றார் என்பது வேறு விடயம். சரி நாடு கடந்த அரசின் செயற்பாட்டிற்கு வருவோம், முன்னாள் எம்பியும் தற்போதைய நாடுகடந்த அரசின் அதிகாரியுமான ஜெயானந்த மூர்த்தி மற்றும் செயற்பாட்டாளர் ருத்திர குமார் போன்றோரின் தகவல்கள் அவ்வப்போது வெளிப்படுகின்ற போதிலும் மற்றோரின் மூச்சுக்காற்றுக்கூட தமிழர்களை வந்தடையவில்லையே?

மேலும் சில நாடுகளில் இன்னமும் நாடுகடந்த அரசின் அங்கத்தவர்கள் தெரிவு இடம் பெறவில்லையே? மேலும் நாடுகடந்த அரசின் அங்கத்தவர்களான தமிழீழ மக்கள் தமது சிக்கல்கள் மற்றும் தேவைகள் தொடர்பாக அவ்வமைப்பின் உயர் அதிகாரிகளை தொடர்பு கொள்ள நினைத்தால்???? அதற்கான பதிலும் செயற்பாடுகளும்???? இதில் இருந்து விளங்கிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான் நாடுகடந்த அரசு இலங்கை அரசிற்கு எதிராக செயற்படுவதிலும் பார்க்க தமிழர்களின் செயற்பாட்டை ஸ்தம்பிக்கச் செய்கின்றது என்பதே உண்மை என்ற எனது கருத்தினை இந்த நாடுகடந்த அரசின் செயற்பாட்டாளர்கள் விரைவில் முறியடித்துக்காட்டியே ஆகவேண்டும். கேபியின் இன்றைய போக்கு நாளைய தமிழர்களுக்கு எவ்வாறு வரலாற்றைக்காட்டப்போகின்றது என்பதனை அடுத்துவரும் பகுதிகளோடு இணைந்திருங்கள்… அன்பன் அருகன்

domenica 1 agosto 2010

மணலாற்றில் நடந்தது என்ன? நெஞ்சை உறையவைக்கும் உண்மை - TamilWin.com

 

மணலாற்றில் நடந்தது என்ன? நெஞ்சை உறையவைக்கும் உண்மை

[ ஞாயிற்றுக்கிழமை, 01 ஓகஸ்ட் 2010, 03:12.29 AM GMT +05:30 ]

கடந்த வருடம் தடைமுகாமில் இருந்து தனியே பிரித்து எடுக்கப்பட்ட போராளிகளில் தீவிரமான விடுதலைப் புலிப் போராளிகளை பிரித்து (பெண் போராளிகள் உட்பட) தனி வதைமுகாமில் அடைத்து வைத்திருந்தது அனைவரும் அறிந்த ஒன்றே. அப் போராளிகுழுவில் இருந்து ஒரு தொகுதியினரை பல குழுக்களாக பிரித்து கள சேவைக்காகவும்தேடுதல் வேட்டைக்காகவும் அவர்கள் பயன் படுத்தி வந்தனர்.

இக் குழுவில் யுத்தகளமுனையில் விழுப்புண் அடைந்து இராணுவத்தால்கைது செய்யப்பட்ட போராளிகளும் அடங்குவர்.இத் தருணத்தில் இராணுவத்தின் கட்டளைக்கு அடி பணியாத கொள்கையில் உறுதி கொண்ட போராளிகள் சிலரை இராணுவ சீருடை அணிவித்து அவர்களை நய வஞ்சகமாக கொலை செய்து விட்டு,இது புலிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையில் நடந்த மோதலாக தமிழ் ஊடகங்கள் வாயிலாக செய்திகளை மெதுவாக கசியவிடுகிறது.

மணலாற்றில் நேற்றைய தினத்திற்கு முன்பு கொல்லப்பட்டவர்களும் காயப்பட்டவர்களும் மேற்படி ராணுவத்தால் கைது செய்யப்பட்டு சித்திர வதைகலுக்கு உள்ளாகி வந்த விடுதலைப் புலிப் போராளிகளே. இத்தகவல்சரத் பொன்சேகா தரப்பிலிருந்து இருந்து கசிய விடப்பட்ட புலனாய்வு செய்தியாகும். ஜி.எஸ் .பி வரி சலுகை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து பெற்றுக் கொள்ள வேண்டுமானால் சில முக்கிய நிபந்தனைகளை ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்தது. அதில் இலங்கை அரசாங்கமானது நீண்ட காலமாக இருந்து வரும் அவசர கால சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முக்கியமாக விடுத்திருந்தது.

இதை கருத்தில் கொண்டே மேற்கண்ட மணலாற்றுச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக அறிய முடிகிறது. அதாவது, இலங்கைத் தீவில் இன்னும் பயங்கர வாதம் ஒழியவில்லை ஆகையால் அவசர கால சட்டத்தை நீக்க முடியாது என்று ஐரோப்பிய ஒன்றியம் உட்பட அனைத்து உலக நாடுகளையும் நம்ப வைக்கும் ஒரு சதித் திட்டமாகும். அரசாங்கத்தின் இச்செயலானது அரச சார்பற்ற நிறுவனங்கல் மற்றும் ஊடகவியலாளர்களின் பிரசன்னம் மற்றும் செயல்பாடுகளை மட்டுறுத்தும் நோக்கமாகவே அறிய முடிகிறது. தமிழர்களுக்கெதிராக தமிழர்களைக் கொண்டே தமிழ் ஊடகங்கள் வாயிலாக உலகுக்கு பறை சாற்றுவதே ராஜபக்ஷே அரசாங்கத்தின் சாதுர்யமாகும்.

மணலாற்றில் நடந்தது என்ன? நெஞ்சை உறையவைக்கும் உண்மை - TamilWin.com