domenica 24 gennaio 2010

பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார் என்று விசுவசியுங்கள்….Arugan

Thirumavalavan பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார் என்று விசுவசியுங்கள்….

கிறீஸ்தவ மதத்தின் தெய்வமாக பூஜிக்கப்படும் “இயேசு” மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்பது நம்பிக்கையல்ல விசுவாசம்.

கண்களால் காணக்கூடியது நம்பிக்கை, காணமுடியாதது ஆனால் உண்மை என்பது விசுவாசம்.

தம்பி இருக்கிறார் என்று நெடுமாறன், வைகோ, திருமாவளவன், சீமான் உள்ளிட்டோர் உறுதியாகச் சொல்லி வருகிறார்களாம்... இவர்கள் புலிகளின் தளபதிகள் போலும்... இறுதிக்கட்டப் போரில் பிரபாகரனுடன் இணைந்திருந்து தப்பியவர்கள் போலும்... யாரைப் பேக்காட்டுகின்றார்கள்... அவர் உயிருடன்தான் இருக்கிறார் என்றே வைத்துக்கொள்வோம்... அதற்காக இவர்கள் சொல்லை வேதவாக்காக ஆதாரமில்லாமல் கொக்கரிப்பதை வைத்து அரசியல் நடத்துகின்றனர்.

திருமாவளவன் இப்போது பாராளுமன்ற உறுப்பினராகிவிட்டார்... கருணாநிதியை தமிழர்களுக்காக பதவிவிலகச் சொன்னவர் திருமாவளவன். இன்னும் பதவியிலேயே இருக்கின்றார்... இதற்கிடையில் தீக்குளிப்பாம் உண்ணாவிரதமாம். எல்லாம் பதவியாசையப்பு பதவியாசை... தன் கணவன் இறந்ததே தெரியாத பார்வதியம்மாள் சொன்னாவாம் தன் மகன் வருவான் என்று சொன்னதாக… இது ஒரு ஆதாரமாக எடுத்துக்கொள்ளும் மக்கள் மத்தியில்,  சமாதானம் வந்தால்தான் என்ன வராவிட்டால்தான் என்ன!!!
புலிகள் பணம் வாங்கியதால்தான் மகிந்த தேர்தலில் வென்றாராம். அப்படியென்றால் தமிழர்களை வைத்து புலிகள் அப்போதும் சரி இப்போதும் சரி பகடைக்காயாக பந்தாடுகின்றார்கள் என்பதையே இணையங்கள் வெளிக்காட்டுகின்றன.  
கேபி, தயாமாஸ்டர், ஜோர்ச் மாஸ்டர், இறுதியாக வாக்குமூலம் அளித்த வைத்தியர்கள், புலிகள் சார்பில் பணம் வாங்கியவர்கள், தமிழ் எம்பி மார்கள், இப்படி எல்லாரும் புலிகள் தரப்பில் இருந்து மாறிக்கொண்டு போகின்றனரே!!!
புpரபாகரன் வந்து பதில் தருவார் அப்போது, யார் இருப்பார்கள் யார் இருக்கமாட்டார்கள் என்பது யாருக்குத் தெரியும். இப்போது பசிக்கிறது உண்ணாவிட்டால் உயிர்போகும்… உரிமை முக்கியமா உணவுமுக்கியமா????
பிரபாகரனைக் கொண்டதாக மார்தட்டிய சரத் பொன்செகா ஏன் பிரபாகரன் மரணத்தை நிராகரிக்கவில்லை… அது ஒன்று போதுமே மகிந்தவை தேற்கடிக்க… பிரபாகரன் உயிருடன் இருப்பதை யோ மரணித்ததையோ விவாதிப்பதல்ல தற்போது தமிழர்களின் தேவை பேய் ஆண்டால் என்ன பிசாசு ஆண்டால் என்ன தமிழர்களுக்கு விடிவு வரப்போவதில்லை. குhரணம் 20 வருடங்களுக்கு மேலாக தமிழர்களுக்கு எதிராக போராட்டத்தை மேற்கொண்ட சரத்திற்குப்பின்னால் வால்பிடித்துக்கொண்டு தமிழர்கள் போவதில் இருந்து தெரியவில்லையா? முகிந்தவின் ஆட்சி கூடாது என்ற சந்திரிக்கா இரண்டு முறை அதே கட்சியின் சார்பில்தானே பதவியில் இருந்த அப்போது வைக்காத ஒரு தீர்வையா இப்போது மகிந்தவிடம் எதிர்பார்க்கின்றா? அப்போது சந்திரிக்காவைப்பற்றி வசைபாடிய தமிழர்கள் இப்போது அவவின் குரல் தலைப்புச் செய்தியாம். 
பலவிடயங்கள் தொகுக்கப்படாத கட்டுரையாகவே இருக்கின்றது. புலிகளின் உத்தியோக பூர்வஇணையத்தளம் என்று ஒன்று வெளிவந்துள்ளது… ஆனால் நாடுகடந்த அரiசின் குழு அதை சட்டபூர்வமாக அறிவிக்கவில்லை. அதே போல் அக்குழுவும் உத்தியோ பூர்வ இணையத்தளம் அது தான் என்பதனை வெயியிடவும் இல்லை. இதில் ஆளாளுக்கு பூச்சாண்டி காட்டுகீனம்.
துற்போது புலிகள் அமைப்பு பலவீனமானது மட்டுமல்ல சிதறடிக்கப்பட்டும் வஞ்சிக்கப்பட்டும் உள்ளனர் அவர்கள் எப்படியும் ஒரு கட்டுக்குள் வந்து ஒரு சாதனையினை நிகழ்த்தும் மட்டும் மக்களை குழப்பாமல் இணையங்கள் சும்மா இருந்தாலே மக்கள் நிம்மதியாக இருப்பார்கள். தேர்தலிலும் முக்கியமான ஒன்று தேய்ந்து போன புலிகள் அங்கத்தவர்களையும் மக்களையும் தேற்றுவதே சிறப்பானது. ஆதற்கு தமிழர்களும் தமிழ் அமைப்புக்களும் என்ன செய்ய வேண்டும். புpரபாகரன் உயிருடன் இருந்தால் என்ன செய்வாரோ அதை செய்யுங்கள்.  
“இருக்கிறதை எடுத்துச் சாப்பிடாமல் இல்லாதனை நினைத்து வாடிச்சுதாம் குரங்கு அப்போது இருந்ததை காகம் வந்து கொத்திக்கொண்டு போச்சுதாம் …” இது தான் தமிழரின் வருங்காலக்கதை….

Nessun commento:

Posta un commento