lunedì 29 agosto 2011

ஊமை நாடகம் போடும் அம்மையாரை யாரும் கேள்வி கேட்டதாக இல்லையே!!!

மிஸ்டர் சீமான்! நீங்கள் கூடவா அம்மையாரை கேள்விகேட்க தயங்குகின்றீர்கள்? ஊங்கள் ஆரவாரங்கள் எங்கே? இத்தனை மக்கள் வீதிகளில் போராடுகின்றபோது, அம்மையார் ஒருவார்த்தையும் சொல்லாதிருப்பது உங்கள் யாருக்கும் வியப்பாக இல்லையா? புல வழக்கறிஞர்கள் வீதிக்கு வந்திருக்கின்றார்களே அதற்கு அம்மையார் பதில் வழங்காதிருப்பது வெறுப்பாக இல்லையா? ஒரு தன்னைத் தீக்கிரையாக்கியுள்ளாளே இதற்கும் அம்மையார் பதில் தராது இருப்பது வேதனை தரவில்லையா?... இதே விடயத்தை முன்னாள் முதல்வர் செய்திருந்தால் எத்தனை வாங்கு வாங்கியிருப்பீர்கள்!!!! ஆம்மையாரின் மௌனத்தை கலைக்க எந்த ஊடகமும் முன்வராதது ஏன்? ஆம்மையாரின் தியாணத்தைக்களைக்க எந்தத்தலைவரும் முன்வராதது ஏன்? துமிழகத்தின் தமிழ் அரசியல் வாதிகள் கூட தமது பதவிகளை இரானாமா செய்வதாக பூச்சாண்டி காட்டதாதது ஏன்???
என்ன சார் இன்னுமா புரியவில்லை இந்த நாடகங்கள் எதற்கென்று!!!  

domenica 28 agosto 2011

“எனது கால் என்பதற்காக, அது சேற்றில் மிதிபட்டால் வாசமா அடிக்கும்…”

800PX-~1சட்டத்தரணிகள் சட்டத்தைப்பயன்படுத்துவதை விடுத்து உயிரை பறித்துவருகின்றார்கள். மூவரின் உயிரைக்காக்கவென்று பலரின் உயிரை பலிகொடுக்க முன்வந்துள்ளார்கள் தமிழகத்துத்தமிழர்களும் புலத்தில் சில தமிழர்களும். என்ன கொடுமையப்பா?  தமிழகத்தின் முதல்வரின் வாசலில் போய்க்கேட்கவேண்டிய விடயத்தை உலகம் கேட்கப் பேசினால் தம்மை திடப்படுத்தலாம் என்ற நோக்கில் பலரின் உயிரை பலிகொடுத்துவருகின்றார்கள். சட்டத்தரணிகளும், நீதிபதிகளும், இணைந்து நாட்டில் இல்லாதொழிக்க வேண்டியசட்டதீர்மானத்தை மக்கள் பலிப் போராட்டமாக வெளிக்காட்டுகின்றனர். இப்போதெல்லாம் மக்கள் போராட்டத்திற்கும், உண்ணா போராட்டத்திற்கும் மதிப்பில்லாது ஆக்கிவிட்டார்கள். நிகழ் வரலாற்றில் போராட்டங்கள் வெண்றதிலும் பார்க்க தேல்வி கண்டமையே அதிகம். அதன் கருத்து போராட்டம் செயலிழந்தது என்றல்ல போராட்ட முறைகளும் அதை நடாத்துபவர்களும் முறையற்றுச் செயற்படுகின்றார்கள் என்பதே!
ஒரு போராட்டம் வெற்றியடைய வேண்டும் என்றால் அதன் போக்குகள் சரியான முறையில் அமையவேண்டும். ஆனால் இப்போது நடக்கின்ற போராட்டங்கள் எல்லாம் நிதியடிப்படையினைக் கொண்டும் பதவி அடிப்படையினைக் கொண்டுமே இடம்பெறுகின்றது. இதில் நீதிக்கும் நேர்மைக்கும் இடம் எங்கே இருக்கப்போகின்றது. இப்போது இந்த மூவருக்காகவும் தனது உயிரை தீக்கிரையாக்கிய பெண்மணிக்கு என்ன பின்னணியில் என்ன நடந்ததோ என்ற விடயங்கள் பற்றியும் அறிந்தாகவேண்டும்.
எனக்கு ஒரு விடயம் விளங்கவில்லை, அதுவாகில் “எனது கால் என்பதற்காக, அது சேற்றில் மிதிபட்டால் வாசமா அடிக்கும்…”  அமேரிக்கா சதாமிற்கு மரணதண்டனை வழங்கும் போது சரி என்று பட்ட ஒரு விடயம் பலருக்கு தவறாகவே பட்டது. அதற்காக சதாமிற்காக எமது இரத்தம் கொதிக்கவில்லையே! அப்போது துக்குக்கு எதிரான எமது போராட்டம் எங்கே போய்த் தொலைந்தது?
மிருக வதைச்சட்டத்திற்கு இடமுண்டு அதுவே மனிதனுக்கு நடக்கும் போது, எமக்கு வேண்டியவர்கள் என்றால் அது தவறாகக்காணப்படுகின்றது. ஏன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை! இத்தனை வழக்கறிஞர்களும் இணைந்து தமது சிறப்பம்சத்தால் விடுவிக்கப்பட வேண்டிய தூக்குதண்டனை சட்டத்தை மக்களிடம் திசை திருப்புவதன் நோக்கமாவது, தவறான விடயத்தையும் மக்கள் போராட்டத்தால் சரியாக்கி விடலாம் என்ற கட்டத்திற்கு தள்ளப்பட்டு விடாதா? இம்மூவரின் குற்றங்கள் நிரூபிக்கப்படா விட்டால் எவ்வாறு அவர்களுக்கு மரண தண்டனை வழங்கக்கூடும் என்று எனக்குப்புரியவில்லை? சட்டத்தால் எடுத்த முடிவை மக்களால் மாற்ற முடியுமானால், சட்டத்தரணி எதற்கு நீதிபதி எதற்கு அரசாங்கம் எதற்கு தீர்ப்புகள்தான் எதற்கு???...
இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களே! நீங்கள் செய்ய வேண்டியது போராட்டமல்ல அம்மையாரின் அலுவலகத்தின் விடுக்கப்படும் கோரிக்கையும் அம்மையாரின் பதிலிலுமே தங்கியிருக்கின்றது. இது இப்படி இருக்க எதற்கு இந்த மறைமுக விளையாட்டுக்கள். இதைப்புரிந்து கொள்ளாத மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுக்கொண்டே வருகின்றார்கள். இதில் மனித நேயம், கருணை ம னுஎன்ற போர்வையில் இன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் சம்பவங்களும் விதிவிலக்கல்ல!!!         

sabato 27 agosto 2011

“அசை போடுவதற்கு ஒரு செய்தி கிடைச்சாச்சு”… அருகன்….

Blind_Justice_svg_medஈழத் தமிழர்களுக்கு இதுவே ஒரு பொழுது போக்காகிவிட்டது…. அதுவாகில் அவ்வப்போது சிலர் ஊளையிடும் போது தாமும் சேர்ந்து ஊளையிடுவது, அது சரியோ பிழையோ என்று கூட எண்ணிப்பார்ப்பதில்லை. “ஊரோடு சேர்ந்து ஓடு” என்பது பழமொழியே தவிர நடைமுறையல்ல என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.
ஜே. அம்மையார் வந்தால் தமிழர்களுக்கு என்ன நடக்கும் என்பதனைப்புரிந்து கொள்ளாமலே முன்னாள் முதல்வரை வீட்டுக்கு அனுப்பினர் தமிழகத்தாரும், சீமான் குழுவினரும்…

lunedì 8 agosto 2011

இத்தாலியில் வீட்டுக்கடன் எடுத்தவர்கள் கவனத்திற்கு…

இத்தாலியில் வீட்டுக்கடன் எடுத்தவர்கள் கவனத்திற்கு

இத்தாலியில் வீட்டுக்கடன் எடுத்தவர்கள் வேலைச்சிக்கல் காரணமாக கட்டுப்பணத்தை கட்ட முடியாதவர்களுக்காக மேலும் சிலகாலவரையறை வழங்கப்பட்டு உள்ளது என்பதனை அறிந்து கொள்க. அதுவாகில் இந்த கால எல்லையானது வருகின்ற 2012ம் ஆண்டு தை மாதம் வரை மீணஇடும் நீடிக்கப்பட்டுள்ளது என்பதே இதன் தகவல்.... எனவே அதற்கான விண்ணப்பத்தையும் மேலதிக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தங்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துங்கள். 

venerdì 5 agosto 2011

சங்கிலியன் சிலை “திறந்து” வைக்கப்பட்டதல்ல, “புனர்மைக்கப்பட்ட” என்ற பதமே பயன்படுத்த வேண்டும்…

224405_10150403412698902_823993901_10465615_3603573_nசில தமிழர்களுக்கும், சில ஊடகங்களுக்கும் பொறுமையே இல்லை என்பதனை கடந்த காலங்கள் நிரூபித்தே வருகின்றன…  அதுவாகில் சங்கிலியன் தொடர்பாக எத்தனை போடுபோட்டார்கள்!!! கடைசியில்  நடந்துள்ள முக்கிய தவறை திருத்த முன்னர மறுக்கின்றார்கள். அதுவாகில் சங்கிலியன் சிலை “திறந்து” வைக்கப்பட்டதல்ல, “புனர்மைக்கப்பட்ட” என்ற பதமே பயன்படுத்த வேண்டும் என்பதனை சுட்டிக்காட்டி அதனைத் திருத்த யாரும் “தலைவர்கள், தேசியவாதிகள், தமிழ்பற்றாளர்கள்… முன்வராதது ஆச்சரியத்தைத்தருகின்றது.

எதையுமே முழுமையாக முடிக்கும் பழக்கம் எமது உறவுகளிடம் மிகக்குறைவாகவே காணப்படுகின்றது. இதில் ஒரு வேடிக்கையும் இருக்கத்தான் செய்கின்றது… அந்த சிலை திரை நீக்கம் செய்த போது கூட்டமைப்புச் செல்லவில்லையாம். காரணம்  டக்ளஸ் திறந்துவைப்பதாலாம் என்று ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தது. “தமிழீழத்தை” “சிங்களவனிடம்” இருந்தே பெறப்போகின்றோம்… அதில் தன்மானம் தெரியவில்லையாம், தமிழன் ஒருவன் திறந்து வைத்தால் செல்லமாட்டார்களாம்… அந்த தமிழனை மட்டுமல்ல எந்தத்தமிழனையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதே என்றும் தமிழர்களின் உண்மை நிலை.

domenica 31 luglio 2011

ஊளையிடும் தமிழ் அரசியல் வாதிகளளே!!!

ஊளையிடும் தமிழ் அரசியல் வாதிகளளே!!!

“சாணக்கியம் என்பது, அரசியலின் ஆணிவேர், முற்போக்கென்பது ஆட்சியின் அத்திவாரம்…” – அருகன்

pim2பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பாக ஊளையிடுவதை விடுத்து, புலம்பெயர்ந்தும் வாழும் ஈழத் தமிழர்கள் இலங்கைப் பிரஜைகளே என்பதனைக் கருத்தில் கொண்டு அவர்களும் வாக்குப் போடும் உரிமையினையும் அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்தாலே பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இருப்பதைவிட கூடுதலாகப்போடவேண்டிய கட்டாயம் அரசிற்கு ஏற்படும் அல்லாவா? மக்கள் தொகையினை வைத்து  பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறைக்க எத்தணிக்கும் அரசின் வழியிலேயே மக்கள் தொகையினை அதிகரித்துக்காட்டி மக்களின் பிரதிநிதிகளை வெளிப்படுத்தலவாமே!

lunedì 25 luglio 2011

“ஒரு அடிமட்டத்தமிழனுக்கு பாதம் வலிக்கும் போது, உயர்மட்ட அரசியல் வாதிக்கு எப்போது மண்டை வலிக்கின்றதோ, அப்போதுதான் தமிழர்களுக்கு உரிமை கிடைக்கும்…” – அருகன்

மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சாம்…

sellva1“ஒரு அடிமட்டத்தமிழனுக்கு பாதம் வலிக்கும் போது, உயர்மட்ட அரசியல் வாதிக்கு எப்போது மண்டை வலிக்கின்றதோ அப்போதுதான் தமிழர்களுக்கு உரிமை கிடைக்கும்…”

சபாஸ்… தமிழரசுக்கட்சி அமோக வெற்றி… கேட்பதற்கு சந்தோஷமாகத்தான் இருக்கின்றது. அதிகாரத்தைக்கையில் எடுக்கும் முன் சற்றுச் சிந்திக்க வேண்டியப ல விடயங்களும் இருக்கத்தான் செய்கின்றது என்பதனை ஐயா சம்மந்தன் அவர்களும் மற்றும் தமிழ் தலைவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

எனது முன்னைய எழுத்துக்களில் அழுத்தம் திருத்தமாகச் சொன்ன விடயங்களைக் கூட மேலோட்டமாகச் செய்வதில் சிரமங்காட்டுவோர் எப்படி தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கப்போகின்றார்கள் என்று புரியவில்லை.

எப்போது, “ஒரு அடிமட்டத்தமிழனுக்கு பாதம் வலிக்கும் போது உயர்மட்ட அரசியல் வாதிக்கு மண்டை வலிக்கின்றதோ அப்போதுதான் தமிழர்களுக்கு உரிமை கிடைக்கும்…” எனக்கு இப்போது வயிறு வலிக்கிறது யாராவது அரசியல் வாதிகளுக்கு பாதங்களாவது எரிகின்றதா என்று கேட்கத் தோன்றுகின்றது.

martedì 7 giugno 2011

“போர்க் குற்றம், இனவழிப்பு இலங்கையினை ஆண்ட அனைத்து சிங்களத் தலைவர்ளுக்கும் பொருந்தும்..."- Arugan

125px-Coat_of_arms_of_Sri_Lanka_svgதலைப்புகளை வைத்தே பிழைப்புகளை நடாத்தும் செய்தியாளர்களை நம்பி உண்மைத்தகவல்களை தமிழ் மக்கள் படிப்படியாக இழந்து வருகின்றனர்.

தமிழன் தனக்கே உள்ள பல சிறப்பு அம்சங்களை தூக்கி எறிந்து விட்டு, மற்றவர்கள் மீதுள்ள கறைகளைமட்டுமே தனது அத்தியாவசியத் தேவையாகக் கருதும் அளவிற்கு இன்றைய தமிழர்களின் வாழ்க்கைத்தரம் மாறிவிட்டது.

domenica 8 maggio 2011

இத்தாலி சாரதி பத்திரத்தினை பெற்றுக்கொள்வதற்கு…

Patente Italianoஇத்தாலி வாழ் தமிழ் மக்களின் தேவைகள் கருதியும், பொருளாதார நிலை கருதியும் காலத்திற்குக்காலம் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் நாம் தற்போது, இத்தாலி சாரதி பத்திரத்தினை பெற்றுக்கொள்வதற்கான சிறந்த முறைதயார்ப்படுத்தலை மேற்கொண்டு வருகின்றோம்.
சாரதி கல்வி நிலையத்தில் கற்றுக்கொள்வதற்கு மக்கள் மொழிச்சிக்கல் மற்றும் பணவிரயம், நேரச்சிக்கல் போன்ற பல நெருக்கடிகளைச்சந்திக்கின்றார்கள். இவ்வாறான சிரமங்களிற்குள்ளாகும் பலருக்காகவே இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான ஆயத்தங்களை நாம் எடுத்துள்ளோம்.

sabato 7 maggio 2011

தாயை இழந்த எத்தனையோ செல்வங்கள் எமது தேசத்தில் இன்று… அவர்களுக்கு யார் தாய்??? – Arugan

100_3819

ஈழம் என்ற சொல்தொடர்பாகவும் அது காலம்காலமாய் எம் தேசத்தை குறித்த சொல் என்றும் வரலாற்று ஆதாரங்களுடன் ஏற்கனவே பல ஆக்கங்களிலும் நாவலிலும் தெரிவித்திருந்தேன். அதை இப்போது மீட்டுவது அவசியப்படுகின்றது.

lunedì 2 maggio 2011

இத்தாலிய தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்களுக்கு இறுக்கமான நடவடிக்கைகள்.

cartaidentitapic29தற்போதைய இத்தாலிய அரசின் ஆட்சியால் தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்களுக்கு மிக இறுக்கமான நடவடிக்கைகள்.

கடந்த காலங்களில் வழங்கிவந்த இத்தாலி அடையாள அட்டை 5வருடம் என்றும் சில காலத்திற்கு முன்னரிருந்து சில பிரதேசங்களில் 10 வருடமாகவும் செல்லுபடியாகும் காலம் வழங்கப்பட்டு வந்தது. இது இத்தாலி மக்களுக்கும் பொருந்தும். ஆனால் தற்போது நடவடிக்கை மாற்றமடையவுள்ளது. அதுவாகில், இத்தாலியின் விசாக்களுக்கு ஏற்ப ஒரு வருடமோ அல்லது 2 வருடமோ சாதாரண விசாக்களின் அடிப்படையில் வழங்கப்படுவதோடு நிரந்தர விசாக்களையுடையோருக்கு 5வருடமாகவும் வழங்கப்படவுள்ளது.

இது எவ்வாறு தமிழர்களைப்பாதிக்கும்?

giovedì 21 aprile 2011

பிறந்த நாள் வாழ்த்து... (முதலாவது)

மச்சானுக்கு ஒரு வாழ்த்து மடல்…   (To:- Luxshan)

எனது வருகையினை நீயறிந்து
என்பின்னே நீபிறந்த என்னருமை அத்தானே!!!

தொலைவு என்னைத் தடுத்ததும் இல்லை,
உறவு நம்மைப்பிரிப்பதும் இல்லை!

mercoledì 20 aprile 2011

ஐ.நா. நிபுனர் அறிக்கை ஒருபோதும் புலிகளுக்க (தமிழர்களுக்கு) ஆதரவாக அமையாது… அருகன்.

untitledஅதிகார வர்க்கத்தின் பிடிக்குள் சிக்கித்தவிக்கும் “மனிதாபிமானமும்”, “மனித நேயமும்” மூச்சுவிட முடியாத நிலையில், இருக்கும் போது எம் தேச விடுதலைக்காகவும் எம் இனத்தின் உரிமைகளுக்காகவும் போராடிய எம் தமிழர்களுக்கெதிராக செயற்பட்ட ஆதிக்க வெறிகொண்ட இலங்கை அரசிற்கு எதிராகவா அறிக்கை அமைந்துவிடப்போகின்றது???...

sabato 16 aprile 2011

புலிகளின் இழப்பை, புலத்திலிருந்தே தமிழீழ அரசியல் வாதிகள் மீட்டுக்கொள்ள வேண்டும்… அருகன் –மீள் வெளியீடு…

01vvcகடந்த முப்பது வருடத்தில் இலங்கை அரசு கைக்கொள்ளாத தந்திரங்களை இப்போது கைக்கொண்டு வருகின்றது. அதுவாகில், இத்தனை வருடமும் அரசியல் வாதிகளுக்கும் சமூகத்தில் அந்தஸ்து உடையவர்கள் என்று கருதப்படுவோருக்குமே (கல்வி, சேவை, அறிவு) அவைகளில் முன்னிருப்புக்கள் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டுக்காலத்தில், புலிகள் அங்கத்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. பிரதம விருந்தினராக தளபதிகள் என்று அழைக்கப்பட்டவர்களே இருத்தப்பட்டனர். சீருடை தரிக்காலிட்டாலும் இது ஒரு இராணுவ அதாவது ஆயுதக்கட்டமைப்பிலேயே கட்டப்பட்டிருந்தது. அதே போக்கை இன்று இலங்கை அரசும் கைக்கொண்டு எந்த நிகழ்ச்சியானாலும் அது இராணுவ தலையீடில்லாமலும் பௌத்த தலையீடு இல்லாதமலும் இடம்பெற மாட்டாது என்றாகிவிட்டது. இந்த “படிப்பினையினை சிங்களவர்களுக்குக் கற்றுக்கொடுத்தவர்கள் விடுதலைப்புலிகளே???” இதன் காரணமே இராணுவத்தினர் இன்னும் தமிழழ்ப்பிரதேசங்களில் இருந்து அகற்றப்படவில்லை.

எதிரிகளிலும் பார்க்க துரோகிகளே புலிகளை அழித்தார்கள் - அருகன்

இன்று சோனியா காந்தியைப்பற்றிய தகவல்கள் அதிகமாகக்காணப்படுகின்றது, ஏனென்றால் தமிழகத்தின் காலம்!!! தேர்தல்மகிந்தவைப்பற்றிய தகவல்கள் தற்போது அப்படியும் இப்படியும் இருக்கின்றது, காரணம் தேர்தல் களம் இலங்கையில் இல்லை!!!

புலிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் நிபுணர்கள் குழு முன்வைக்கிறது????

Allegations found credible by the UN Panel
The Panel’s determination of credible allegations reveals a very different version of the final stages of the war than that maintained to this day by the Government of Sri Lanka. The Government says it pursued a "humanitarian rescue operation" with a policy of "zero civilian casualties". In stark contrast, the Panel found credible allegations, which if proven, indicate that a wide range of serious violations of international humanitarian law and international human rights law were committed both by the Government of Sri Lanka and the LTTE, some of which would amount to war crimes and crimes against humanity. Indeed, the conduct of the war represented a grave assault on the entire regime of international law designed to protect individual dignity during both war and peace.

venerdì 15 aprile 2011

மகிந்தவிற்காகப்போராடும் தமிழ் செயற்பாட்டாளர்கள்...

imageசும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம்” ... என்ற கதையாச்ச எம் தமிழர்களின் செயற்பாடுகள்.

எதை எப்படிச்செய்ய வேண்டும்…, எப்போது செய்ய வேண்டும்…, என்ற சில முறைகள் இருக்கின்றது என்பதனை நாம் தொடர்ந்து மறந்தே வருகின்றோம். நான் அடிக்கடி சொல்லிக்கொள்ளும் விடயம் “வாசகர்கள் ஊடகவியலாளராவதால்” வருகின்ற தொல்லைதான் இவை!

giovedì 14 aprile 2011

(Flussi) புதிய ஆட்களை இத்தாலிக்குள் எடுப்பதற்கான சட்டத்தின் பதில்கள் வெளிவருகின்றன...

கடந்த தைமாதம் மேற்கொள்ளப்பட்ட (Flussi) புதிய ஆட்களை இத்தாலிக்குள் எடுப்பதற்கான சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்கள் தொடர்பான முன்னோக்கிய மேலதிக விபரங்கள்.

RE0101756975

mercoledì 13 aprile 2011

2011 புதுவருடத்தை மகிழ்வாய் ஏற்றுக்கொள்வோம்....!!!!

mayan_calendar02கொண்டாட்டங்களும், பெருநாட்களும் நடந்துவருவதே, கடந்து சென்ற துன்பங்களை சமாதானப்படுத்தவும், பிளவுபட்ட உறவுகளிடையே பிணைப்பை ஏற்படுத்தவுமே என்ற வகையில் பிறந்துள்ள புதுவருடத்தை மகிழ்வாய் ஏற்றுக்கொள்வோம்....!!!!

sabato 9 aprile 2011

சரித்திரத்தின் சந்தியில் எம் தலைவனுக்காய்…

எம் தலைவனுக்காய் எனது குரல் … !

PKஅவதாரம் முடிந்ததென்று யார் சொன்னார் -தே
வாலையங்கள் போது மென்று யார் சொன்னார்,
வேதனைகள் தீர்த்துக் கொள்ள வேதங்கள் வந்ததென்றால்-பெருஞ்
சோதனைக் காலத்தில் சாதனை சாதித்தவரே தேவர்கள்!

காவியங்கள் போது மென்று யார் சொன்னார் -சில
கல்லறைகள் போலியென்று யார் சொன்னார் ,
சோகப் பெருமூச்சுக்குள் சுகந்தம் வீசுவதற்காய் -வீர
யாகப்புரட்சி செய்த யதார்த்த நாயகர்கள் எங்கள் தேவதைகள்!

புலிகளின் சர்வதேச ஒப்பந்தங்கள் மன்னாரை மையப்படுத்தியிருந்தால்,... !!!

A215B35967322A407D353C796E86FE

புலிகளின் சர்வதேச ஒப்பந்தங்கள் மன்னாரை மையப்படுத்தியிருந்தால்,... !!!

இன்றைய சர்வதேச நகர்வுகள் அனைத்தும் வியாபாரத்தையே நோக்கி காணப்படுகின்றமை தவிர்க்க முடியாதவை. இந்த வகையில் எமது தமிழீழப் போராட்டத்தின் உண்மைத்தன்மையினை சர்வதேசம் புரிந்து கொள்ளும் என்று எண்ணியமை எமது குற்றங்களே? புலிகள் அமைப்பும் அதன் தலைமையும் சர்வதேச பேச்சுக்களின் போது, மன்னார்ப்பகுதியில் காணப்படுகின்ற பெற்றோலிய வளத்தையும் மற்றைய வெளிநாட்டு முதலீடுகளையும் மையப்படுத்தியிருந்தால், தமிழீழப்பாதை திறந்திருக்கும் என்பது இன்றைய லிபியப்போர் நமக்கு வெளிக்காட்டுகின்ற மிகப்பெரிய பாடம்.