mercoledì 27 gennaio 2010

ஒரு மணியளவில் ராஜபக்ச 60 லட்சம் வாக்குகள் (58.8%) பெற்றிருந்தார்.

Anuradapura_Swarnamali சிறிலங்க அதிபர் தேர்தலில் பொன்சேகாவை எதிர்த்துப் போட்டியிட்ட தற்போதைய அதிபர் மகிந்தா ராஜபக்ச 58.8% வாக்குகளைப் பெற்றுள்ளார். இதையடுத்து அவர் விரைவில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட உள்ளது.
நேற்று நடந்த சிறிலங்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை துவங்கியது. துவக்கம் முதலே ராஜபக்ச முன்னிலை வகித்தார். மதியம் ஒரு மணியளவில் ராஜபக்ச 60 லட்சம் வாக்குகள் (58.8%) பெற்றிருந்தார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா 41 லட்சம் வாக்குகள் (40.8%) வாக்குகள் பெற்றுள்ளார்.
சிறிலங்க அதிபர் தேர்தலில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார் என்பதால், அதிபர் மகிந்தா ராஜபக்ச விரைவில் வெற்றி வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என அதிபர் மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Nessun commento:

Posta un commento