அப்போது இறுதிக்கட்டப் போர் உச்ச கட்டத்தில் இருந்த போது, உலகத்தமிழர்கள் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், தீக்குளிப்பென்றெல்லாம் இலங்கை அரசிற்கெதிரான போராட்டங்களை மேற்கொண்டபோது, தமிழ் ஈழச்சிறுவர்களுக்காக எமது UNGA ஒன்றியத்தால் நாம் மட்டுமே இலங்கை அரசிற்கெதிரான மாற்று வழியைப்பிரயோகித்தோம். அதனை அப்போது வெறுத்தவர்கள் இப்போது அவ்வழியை தலையில் தூக்கிவைக்கின்றனர். இதில் மனவருத்தம் என்ன வெண்றால், இத்தனை இழப்புக்களின் பின் என்பதுதான் ...
உண்மை இதுதான்
ஈழத்துச் சிறுவர்களுக்காக எமது உயிரைப் பணயம் வைத்தோம்
இலங்கை அரசு இத்தாலியில் நடத்திய மாபெரும் நிகழ்வில் பல வெளிநாட்டவர்கள் கலந்து கொண்டதை அறிந்த நாம் அந்நிகழ்ச்சியை ஊடறுத்து, ஈழத்துத் தமிழ்ச் சிறுவர்களின் அவலங்களை சடுதியாக அரங்கேற்றி இங்கு கூடியிருந்த வெளிநாட்டு மக்கள்மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். இதன் DVD பிரதியை அதில் பங்குபற்றிய ஏராளமானோர்கள் வாங்கிச் சென்றார்கள். அதன்பிரதியை தங்களுக்கு அனுப்புகின்றேன். இதில் பங்குபெற மற்றைய தமிழர்கள் பயத்தில் பின்வாங்கிய போதும் நாம் தூதராலயத்தில் இத்தகைய செயலை அரங்கேற்றினோம். இப்படி வேதனையோடா தமிழழ்ச்சிறுவர்கள் அலங்கோலப்படுகிறார்கள் என்று கண்கலங்கினர் அனைவரும். என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்பிரதி மனித உரிமை அமைப்புக்களுக்கும் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விழிப்புணர்வில் விடுத்த வேண்டுகோளின் சாராம்சம்
ஈழத்துத் தமிழ்ச் சிறார்கள் கொல்லப்படுவதையும் மருத்துவ சவதியின்றி அல்லல்படுவதையும் அத்தியாவசியத் தேவைகளில் இருந்து விலக்கப்படுவதையும்>போரின்மூலம் தமிழ்ச் சிறுவர்கள் பாதிக்கப்படுவதையும்> வைத்திய வசதியின்றி அழிவதையும்> தவிர்க்க தாங்கள் நல்லதொரு வழியினை உருவாக்கவும்> அழிவிலிருந்து மீட்ட தமிழ்ச் சிறுவர்களுக்கு ஆரோக்கியமான திடமான ஒரு எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்கவும் உறுதிதருமாறு எமது ஒன்றியத்தின் சிறுவர் சார்பில் பணிவன்புடன் வேண்டுகின்றோம். என்று தொடர்கிறது...
http://arugan.spaces.live.com/blog/cns!2D4751275AC842ED!1269.entry
Nessun commento:
Posta un commento