venerdì 9 aprile 2010

பிரபாகரனுடைய போராட்ட அனுபவத்திலும் பார்க்க மகிந்தவுடைய அரசியல் மற்றும் வரலாற்று அனுபவம் அதிகம்…!!!! Nanri arugan.com

இலங்கையில்  2010ன் பாராளுமன்றத் தேர்தலும், தமிழர்களின் (கட்சிகளின்) எதிர்காலமும்…

prabha_in_india  பிரபாகரனின் ஆயுதபலத்தால் மட்டும்  தமிழீழ வல்லரசை அமைத்துவிடலாம், அதிலும் கண்மூடித்திறக்கும் போது ஈழம் மலர்ந்து விடும் என்று பிரச்சாரங்களும் பலருடைய போக்குகளும் நடந்த காலம் இன்னும் கண்முன்நின்று அகலவில்லை!!!

இயேசு “அவர் அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டு அவர்களுக்குப் பரிமாறும்படி தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார். அப்படியே இரண்டு மீன்களையும் எல்லாருக்கும் பங்கிட்டார். 42. எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; 43. மேலும் அப்பங்களிலும் மீன்களிலும் மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள். 44. அப்பம் சாப்பிட்ட புருஷர் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள்.(மாற்கு 6:41-44) என்றால் அதன் உள் அர்த்தத்தையும் உண்மையினையும் ஆராய்ந்து பார்க்காமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும் மக்கள் இருக்கும்வரையில் எதுகும் மாறப்போவதில்லை!!!
அதே வேதாகமத்தில் “ரோமர் 7:6 இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்.

என்றும், “ Iபேதுரு 4:12 பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல்,” குறிப்பிட்டிருக்கின்றது. இதிலிருந்து எடுத்துரைக்க முயல்வது எதுவாகில்,, யாரிடம் எது கேட்டால் அது எவ்வாறு நடக்கும் என்பதனை ஓரளவிற்கேனும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

leaders_swiss-meeting3-300x144 அதாவது, சிங்களவர்கள் பெரும் பகுதியானவர்களாக இருந்த போதிலும், வீதாசாரத்தில் பார்க்கும் போது, சிங்கள கட்சிகளிலும் பார்க்க தமிழ் கட்சிகள் மிக அதிகமாகவே காணப்படுகின்றது. கடந்த காலத்தில் தமிழ் கட்சிகளில் தலைவர்கள் இரகசியம் இரகசியமாக ஒரு வெளிநாட்டு கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தார்கள் அதன் விளைவு மேலும் தமிழர்களை சின்னாபின்னமாக்கியது. இதில் அரசியல் தந்திரத்தில் கைதேர்ந்தவர்கள்போல், டக்ளசும், கருணாவும் பங்கு பெறவேயில்லை… அதற்கு புலிகளின் ஆதரவாளர்களால் தமக்கு ஏதாவது ஆபத்துவரலாம் என்ற ஐயப்பாட்டை மக்களுக்கு வெளியிட்டாலும் அது எத்தனை தூரம் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்றும் பார்க்க வேண்டும். குhரணம் அவர்கள் அக்காலத்தில் இலங்கை அமைச்சர்களாக இருந்ததால் சர்வதேச அரசு பார்காப்பு வழங்கியிருக்கும் என்பதும், அதில் ஏதும் சிக்கல் ஏற்படும் பட்சத்தில் புலிகளுக்கான பின்னடைவு புலத்தில் மேலும் அதிகரிக்குமேயொழிய, அதன்மூலம் எந்த சிக்கலும் தீர்ந்திருக்காது என்பதனையும் புரிற்து கொள்ளவேண்டும்.

இந்த நிலையில், கிழக்குமாகான முதலமைச்சர் பற்றியும் வினா எழுப்பத்தான் வேண்டும். காரணம் அவர் முதல் அமைச்சராக இருந்தும் இதில் பங்கு பெற்றியிருக்கின்றார் என்று பார்க்கும் போது, இந்தத்தேர்தலில் அவருக்கு வாக்கும் பதவியும் கிடைக்க வேண்டுமாயின் முஸ்லீம் மக்களையும் தமிழ் மக்களையும் புலிகளின் ஆதரவாளர்களையும் கவர்ந்தாக வேண்டும் என்ற ஒரு போக்கும் காணப்படுவதால் தனது போக்கை புலத்தில் பதித்துப்பார்த்தார் என்பதும் உண்மையே!!!! காரணமும்முள… அதாவது, கடந்த தேர்தலில் திரு சந்திரகாந்தனுக்கு என்று தனிவாக்குகள் கிடைத்ததா அல்லது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளுக்கு என்று வாக்கு கிடைத்ததா அல்லது, கருனா என்ற முன்னால் தலைவருக்காக கிழக்கில் வாக்குகள் கிடைத்ததா என்ற பால கேள்விகளும் உள்ளடங்கித்தான் இருக்கின்றது. இந்த வகையில், மட்டக்களப்பு

மாவட்டத்தில் அங்சல் வாக்குகளைப்பார்க்கும் போது,

Ilankai Tamil Arasu Kadchi

2,576

42.44%

United People's Freedom Alliance

2,254

37.13%

United National Party

671

11.05%

Thamil Makkal Viduthalai Pulikal

318

5.24%

 

இவ்வாறு அமைந்திருக்கின்றது. ஒருபானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பது போல், சராசரியாக பார்க்கும் போது முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில் இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கவில்லையா??? இதில் தமிழர்கள் மட்டுமல்ல முன்னால் புலிகளும் ஆயுதத்தில் அக்கறை காட்டிய அளவிற்கு அரசியலில் அக்கறை காட்டவும் இல்லை அரசியலைக்கற்றுக்கொள்ளவும் இல்லை… இதில் இன்னொருபக்கமாக வடக்கைப்பார்த்தால் அமைச்சர் டக்ளஸ் தலையில் வரதனின் வருகை வாலைச்சுருட்டி வைக்குமளவிற்கு ஒரு திகைப்பை ஏற்படுத்தியிருக்கின்றது என்றால் அது மிகையில்லை.
president_300 ஏற்கனவே பல இடத்தில் நான் குறிப்பிட்ட விடயம், தன்மட்டுமே இனி தமிழர்களை காக்கக்கூடிய ஒரு தலைவன் என்ற தலைக்கணம் கருனாவிற்கு இல்லாமல் இல்லை!!! மகிந்த கருணாவை வைத்திருப்பதற்குக்காரணம் பல ஆக்கங்களில் நாசுக்காகவும் வெளிப்படையாகவும் வெளியிட்டிருக்கின்றேன்.

அதன் உள்ளர்த்தத்தை கருணா அவர்கள் அறிந்தாரோ என்னவோ மகிந்தவின் அசைவிற்கேற்ப தன்னை அசைத்து வருகின்றார். ஆனால் தனது சாதூர்யம் வெளியில் தெரியாத அளவிற்கு மகிந்த தனது காய்களை நகர்த்தியும் வருகின்றார்.

தனக்குக்கிடைத்த அதிகாரத்தை வைத்து கருணா அவர்கள் மற்றைய எம்பிக்கள் மற்றைய தமிழ் அமைச்சர்கள் சாதிக்காததை சாதித்திருக்கலாம் என்பது எனது கருத்து. அடுத்த பதவிக்காலத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்பது புத்திசாலித்தனமாகப்படவில்லை

ஆனால் மகிந்தவுடைய இரஜதந்திரத்தை அறியாத அரசியல் வாதிகள் பலர் இன்று அரசியலில் தாம்தான் மேதைகள் என்று மார்தட்டி வருகின்றனர். அதில் கருணாவும் ஒருவர் என்றால் அது மறைக்கக்கூடிய விடயமல்ல! ஆனால் மகிந்தவுடைய ஆற்றல் 1970ஆண்டிற்கு முன்னரே அரசியலில் விழையாடிய அனுபவமுடையவர் என்பதனை தமிழர்கள் மற்றும் அரசியல் வாதிகள் நினைவில் வைத்திருக்க வேண்டும். பிரபாகரனுடைய போராட்ட அனுபவத்திலும் பார்க்க மகிந்தவுடைய அரசியல் மற்றும் வரலாற்று அனுபவம் அதிகம்மட்டுமல்லாது,  பிரபாகரனுக்கு செயற்திறனற்ற உருத்திரகுமார் சட்டத்தரணியென்றால், மகிந்தவிற்கு மிகப்பலமுள்ள அதிகாரத்துடனேயே தன்னுடைய சட்டத்தரணி பட்டமும் அவருக்கு ஒரு பாடத்தை மேலதிகப்படுத்தியிருக்கின்றது. இது மகிந்தவிற்கு துதிபாடலல்ல பகுத்தறிவிற்கு தூபங்காட்டல்...

rusiya-honor பல தமிழர்களுக்கு மகிந்த ஒரு சட்டத்தரணி என்பதே தெரியாது. வுல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது ஒரு புறம், இன்னொரு விடயத்தை கவனத்தில் எடுக்க தமிழர்களாகிய நாம் அடிக்கடி மறக்கடிக்கப்படுகின்றோம். அதாவது, சம்மந்தமற்றவரின் காலில் விழுந்து கண்ணீர்வடிப்பதிலும் பார்க்க சம்மந்தப்பட்வருடன் கைகுலுக்கினாலே தமிழீழம் கிடைத்த மாதிரித்தான். இதில் புலிகளின் ஆதரவாளர்கள் கண்டிப்பான எதிர்ப்பிலேயே இருக்கின்றனர்.

தமிழீழம் கிடைக்காலிட்டாலும் பரவாயில்லை தமிழர்கள் ஒற்றுமைப்படக்கூடாது என்பதிலும் கட்சிகள் பிளவுபட்டுக்கிடக்க வேண்டும் என்பதிலும் மிகக்கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்கள். இலங்கையில் ஜனநாயக தேர்தலை நிராகரித்தவர்கள், புலத்தில் தேர்தல்மூலம் தம்மை வெளிக்காட்ட முனைகின்றனர். அதிலும் ஜனநாயகத்தை காட்ட முயலவில்லை.

எப்படியென்றால், பின்னுள்ள தகவலைப்பாருங்கள்… சிலநாட்களுக்கு முன்னர்  ஒரு இணையத்தைப்பார்த்தேன்...
…பிரித்தானியாவில் இயங்கி வரும், (1)பிரித்தானிய தமிழர் பேரவை, (2)இளையோர் அமைப்பு, (3)கிளைகள் அமைப்பு, (4)வுNஊ என்று அழைக்கப்படும் வட்டுக்கோட்டை தீர்மான மீள் வாக்கெடுப்பு நடத்திய அமைப்புகள் அனைத்தும் (5)நாடு கடந்த தமிழீழ அரசுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்திருப்பதாக அறியப்படுகிறது. கடந்த காலங்களில் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்த போது சில அதிருப்தியாளர்கள் பல பிழையான தகவல்களை வெளியிட்டனர். அதனால் பெரும் சர்ச்சையும் எழுந்தது. நாடு கடந்த அரசாங்கம் அமைப்பதற்கான தேர்தல்கள் மே மாதம் 2ம் திகதி நடைபெறவுள்ள நிலையில்,…
allசில அமைப்புக்கள் இணைந்து நாடுகடந்த அமைப்பிற்கு ஆதரவு கொடுப்பததாக எழுதப்பட்டிருந்தது. எனக்கு அதை வாசித்ததும் சிரிப்புத்தாங்கமுடியவில்லை...-. அத்தோடு தமிழர்களை பேக்காட்டுவது எவ்வளவு எழிது என்பதனை தமிழர்கள் தமிழ்த் தலைவர்கள் நன்கு அறிந்து வைத்திருக்கின்றது என்பது தெளிவாகப்புரிந்து.

புலிகள் இயக்கம், புனர்வாழ்வு கழகம், தமிழர்கலைபண்பாட்டுக்கழகம், இவைபோன்ற அமைப்புக்கள் வேறு, வேறு அமைப்பாம்,... தரைப்புலிகள்,  பெண்புலிகள்,  கடற்புலிகள்,  ஈரூடகப் படையணி,   வான்புலிகள், கரும்புலிகள், சிறப்புப் படையணிகள், வேவுப்புலிகள், விடுதலைப் புலிகளின் பொறியியல் பிரிவு, இவை அனைத்தும் வேறு வேறு அமைப்பாம் இவை அனைத்தும் இணைந்துதான் தமிழீழப்போராட்டத்தை நடாத்தியது என்றது போல் அவ்வாக்கம் வெளிப்படுத்தியிருந்தது.  துமிழ்மக்கள் விடுதலைப்போராட்டத்தில் மற்றைய அமைப்புக்கள் போராட்ட குழுக்கள் எல்லாம் வேறு நாட்டவர்கள் போலும்,….

மட்டுமல்லாது அனைத்துநாடுகளிலும் ஏராளம் தமிழ் அமைப்புக்களில் ஒரு சில அமைப்புக்களே தமிழர்கன் நலன்கருதி தொடர்ந்த சற் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும், அவ்வாறான அமைப்க்களை விடுத்து தாமே சில அமைப்புக்களை வௌ;வேறு பெயர்களில் ஆரம்பித்து விட்டு அமைப்புக்கள்... அமைப்புக்கள் என்ற வார்த்தை உச்சரிப்பினைப் பிரயோகிப்பது அறிவுடையோருக்கப் பொருத்தமாகப்படவில்லை.

முதலில் எல்லா அமைப்புக்களையும் இணைக்குதம் ஒரு தளம் ஒன்று எல்லா அமைப்பின் ஆதரவுடனும் மேற்கொள்ளப்பட வேண்டும். அதைவிடுத்து தாமே அமைப்புக்களை உருவாக்கி,  அதன் ஒன்றிப்பை மட்டும் இணைத்து சர்வதேச ஒன்றியம் என்ற பேச்சினை ஆரம்பிப்பது முறையற்றது.

ஐரேப்பிய ஒன்றியம் எப்படி இயங்குகின்றது... பல நாட்டின் பிரதிநிதிகளைக்கொண்டே இயங்குகின்றதே ஒழிய தாமே உருவாக்கிய அமைப்புக்களைக் கொண்டு இயங்குவனவல்ல.

எமது அமைப்புக்கள் எப்போது தமது தவறினை உணர்ந்து தம்மைச்சீர்திருத்தப்போகின்றார்கள்.!!! 
மேலும் நாடுகடந்த அரசை அமைக்கும் செயற்குழுவிற்கு யாரும் அறிவுரை சொல்வது பிடிக்காது, அப்படி சொன்னாலும் அவர்களுக்குக்கேட்காது, அப்படியே கேட்டாலும் அதனை மாற்றுக்கருத்துக்காரர்கள் என்று ஓரங்கட்டிவிடுவது என்பதே அவர்களின் தேசிய கொள்கை.

TamilEela Card பலதடவைகள் நாடுகடந்த அரசின் அடையாளச்சான்றிதழ் தொடர்பாக வலியுறுத்தியிருந்தேன். ஆனால் அதை பொருட்படுத்தததால் இன்று உலகம்பூராவும் நடைபெற்ற தேர்தல் வீதாசார அடிப்படையில் படு தோல்வியை அடைந்திருக்கின்றது. இருந்தும் மீசையில் மண்ஒட்டவில்லை என்று வீரம் பேசுகின்றனர். ஒரு நாட்டில் தேர்தல் காலத்தில் 50ஆயிரத்திற்குமஇ மேலானவர்கள் சேவையில் ஈடுபடும் போது 50ஆயிரத்திற்கும் உட்பட்ட வாக்குகளைமட்டும் உலகம் முழுதுப் காட்டி அதுவே 100வீதம் என்று மார்தட்டும் முட்டாள்தனத்தினை சீர்திருத்தச்சொன்னால் அதனை எழுதியவர்மீது கறைபடியச்செய்வதில் அக்கறை அதிகமாகிவிடுகின்றது. 
இலங்கை அரசாங்கத்திற்கு தமிழர்கள் என்னதான் செய்தாலும் கடைசிவரை இலங்கைக்கடவுச்சீட்டிலேயே காலங்கடத்த வேண்டியுள்ளது. தமிழீழ கடவுச்சீட்டை தமிழர்களுக்குக்கூட அடையாளம்காட்ட கூச்சப்படுகின்ற பலர் வெளிப்படையாக வீரம் பேசுவார்களை  எனக்கு அதிகமானவரைத் தெரியும்.
ஏற்கனவே சென்ற தேர்தலில் எமக்கு இருந்த சந்தர்ப்பத்தை மகிந்தவின் சினத்திற்காளாகும்படி ஏவிவிட்டனர் பலர். இப்போது தமிழர்களையே பிரித்து அவர்களுக்குக்கடைக்கவிருந்த வாக்குகளை சின்னாபின்னமாக்கி சிதைத்தனர் தமிழ் முதளைகள்.

இலங்கையில் வாக்குப்போட்டால், அது தமிழர்களின் தேசத்துரோகச்செயல் அதுவே புலத்தில் போட்டால், தேசப்பற்றாளர் செயலாம்…   இதற்கு சில பகுத்தறிவற்றவர்கள் தலையாட்டுகினம். இதற்குப்பெயர் ஜனநாயகமாம்… இலங்கையில் நடப்பது அநினாயகமாம்… சபாஷ் சரியான தீர்ப்பு

இதில் இனி என்ன செய்யப்போகின்றார்கள்??? மகிந்தவின் காலில் விழுந்தலும்,தம்முடைய காலத்தை கழிப்பதிலும் ஏகபோக வாழ்வை வாழ்வதிலும் வீராப்பாக பேட்டி கொடுப்பதிலுமோ அடுத்த தேர்தலை எதிர்பார்க்க வேண்டியதான். இல்லை மாறாக ரணிலுக்கு ஆதரவாக சென்றால் அந்த ஆதரவால் எதையுமே அசைக்கப்போவதில்லை என்பதனையும் இவர்கள் நன்றாக உணருவார்கள் இதற்கொன்றும் அரசியல் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் எதுகும் இல்லை!!! பழுத்த பழமான சம்மந்தனே சம்மந்தமற்ற வேலையினைச் செய்யும்போது, மற்றைய தலைவர்களா சமாதானத்தை ஏற்படுத்தப்போகின்றார்கள். இனிச ம்மந்தனுக்கு ஒரு சிலைவைத்து பாராட்டக்பொடுத்தால் சரித்திரத்தில் தான் நிலைநாட்டியதற்கான பெருமையுடன் அவர்காலம் கழிந்துவிடும் அப்படியானால் தமிழர்களின் எதிர்காலம்??????????? தொடரும்  

Nessun commento:

Posta un commento