domenica 18 aprile 2010

ஆழுமை இல்லாத இடத்தில் அதிகாரம் இருப்பது பொருந்தாது

Sampanthan--hakeem அரசனை நம்பி புருசனைக்கைவிட்டமாதிரி இருக்கின்றது கூட்டமைப்பினரின் செயல். மேலும் மீசையில மண்ஒட்டாதது மாதிரி “மக்களாணை” … மக்களாணை என்கின்றார்களே, 22 பாராளுமன்ற உறுப்பினர்களை விட 13 பாராளமன்ற உறுப்பினர் அதிகமோ????
இராஜதந்திரமற்ற கூட்டமைப்பினர், எதிரியின்கையைக் குலுக்காமல் , துரோகியின்  காலில் விழாசென்றார்கள். ஆனால் பேச்சு நடத்து தயாராகும் கூட்டமைப்பினருக்கு ஒரு தகவலை  “ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் ஒரு தடவை கையைச் சுட்டுக்கொண்டவன் நான். இன்னொரு தடவை அப்படிச் செய்வதற்கு நானொரு முட்டாள் அல்ல வெனத் தெரிவித்திருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அமைச்சுப் பதவிகளுக்காக சிறுபான்மைச் சமூகத்தை விலைபேசும் துரோகத்தனத்தை ஒருபோதும் செய்யமாட்டேன் எனவும் உறுதிபடக் கூறியுள்ளார். “ தெரிவித்திருக்கும் இந்த கட்சித்தலைவரின் வார்த்தையில் அடையாளம் காட்டப்பட்ட பகுதியை கூட்டமைப்பினர் நன்கு உணரவேண்டும். பிரபாவுடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டு, கடைசிவரை அரசுடன் மற்றும் எதிர்க்கட்சியுடன் இணைந்திருந்தவர்கள் இப்போது எது செய்தாலும் என்ன கிடைக்கப்போகின்றது. கூட்டமைப்பினருக்கு இன்னும் அறிவு தெளியவில்லை… விரைவில் கூட்டமைப்பின் தலைமை மாற்றப்படவேண்டும். அப்போதுதான் தகுதியான அறிவுகள் செயற்படும். "ஆழுமை இல்லாத இடத்தில் அதிகாரம் இருப்பது பொருந்தாது."

Nessun commento:

Posta un commento