giovedì 8 aprile 2010

புலிகளின் தலைவர்கள் தாடர்பாக எழுதும் அருகனின் தகவல்களை உறுதிப்படுத்தும் பிரபல்ய இணையங்கள். Nanri arugan

6ம் திகதி ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் பல தடவைகள் அருகன் தளத்தில், புலிகளின் கடந்த காலத்தில் நடந்த துன்பவியல் சம்பவத்தின் பின்னர் ஏற்பட்ட நிலைதொடர்பாக வெளியிட்ட விடயங்கள் தொடர்பாக பலர் வினாக்களை எழுப்பியிருந்தனர். அதன்  விளைவு பல இணையங்களில் தற்போது வெளிவருகின்றன.உதாரணம் அதிர்வு இணையம் பெரும்பான்மை மக்களால்

image

பார்க்கப்படுகின்ற தளத்தில் ஒன்று என்பது உண்மையே, அவ்வாறான தளத்தில் இது தொடர்பான தகவல்கள் கசிவது, அருகனின் தளத்தில் வெளிவருகின்ற தகவல்களை ஊர்ஜிதப்படுத்துகின்றதாக இஅருக்கின்றது. இதைக்கவனியுங்கள்….

“குறிப்பாகச் சொல்லப் போனால், இராணுவத்தால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளின் பல மூத்த தளபதிகள் சிறையில் உயிருடன் இருக்கின்றனர், சிலர் காடுகளில் மறைந்து வாழ்ந்து வருகின்றனர் என்பதே உண்மையாகும்.” xxxxxxxxxxxxxxxxxxxxxxxxx 

image

இதோ அருகன் தளத்தில் ஏற்கனவே எழுதிய பகுதிகளில் சில…

புலிகளின் தலைவர்

பற்றிய அதிரடித்தகவல்கள்…

புலிகளின் தலைவர் பற்றிய அதிரடித்தகவல்கள்…
புலிகளின் தலைவர் இலங்கை இராணுவத்திலோ அல்லது அரசின் சிறப்புக்கண்காணிப்பிலோ இருக்கலாம் என நான் சந்தேகப்படுகின்றேன் என்று பல தடவைகள் எனது ஆக்கத்தில் குறிப்பிடடேன். எனினும் இதனை ஊர்ஜிதப்படுத்த முடியாததால் வெறும் சந்தேகத்தைமட்டும் வைத்து தகவலை வெளியிடமுடியாது என்பதால் இப்போதும் சந்தேகத்தின் பெயரிலேயே தகவலை வெளியிடுகின்றேன்.  அதாவது, தலைவரின் தாயும், தந்தையும் இலங்கை இராணுவத்தில் சிறைப்பட்டிருந்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரத்தையோ, அல்லது தகவலையோ புலிகளின் ஆதரவான எவரும் தெரிவிக்கவில்லை மாறாக தலைவரின் பெற்றோர்கள் வெளிநாட்டில் இருக்கின்றார்கள் என்று தகவல் வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.  அதுபோலவே, புலிகளின் தலைவர் மரணமானார் என்ற விடயத்தில் இலங்கை அரசும் எவ்வித ஸ்திர நிலையினையும் வெளியிடவில்லை ஆனால் தலைவர் இல்லாதது போல் சாதாரணமாக செயற்படுகின்றனர் என்றால் எப்போது வேண்டும் என்றாலும் அதனை நிரூபிக்கத்தாயாராக இருக்கின்றார்கள் என்றால் அதில் உண்மை இல்லாமல் இல்லை. மேலும் தலைவரின் தேடப்படும் பட்டியலில் சர்வதேச புலணாய்வினரின் போக்கில் மாற்றம் மற்றும் இந்திய புலணாய்வினரின் போக்கில் மாற்றங்கள் ஆனால் இலங்கைப்புலனா ய்வினரின் போக்கில் முற்றிலும் மாறுபட்ட தன்மை இவை அனைத்தையும் பார்க்கும்போது தலைவர் இலங்கை அரசின் பாதுகாப்பில் இன்னமும் உயிருடன் இருக்கின்றார் என்றே எண்ணத்தோன்றுகின்றது… இது உண்மையா  அல்லது சந்தேகமா பொறுத்திருங்கள் அடுத்த பகுதியில்…

201987 என்று வெளியிட்ட இந்த தகவல் இலங்கை இராணுவத்தையே திகைக்க வைத்துள்ளது. அதாவது, சரத்பொன்செகாவே இதுதொடர்பாக எந்தத்தேர்தல் களத்திலும் வெளியிடவில்லை, நாடுகடந்த அரசின் செயற்குழு எந்த தகவலையும் வெளியிடவில்லை, புலிகளால் கட்டப்பட்ட கூட்டமைப்பினர் இதுதொடர்பாக எந்தத்தகவலையும் வெளியிடவில்லை, புலிகளின் ஆதரவாக இயங்கிய தளங்கள் உதாரணமாக தமிழ் நேசன் ஒரு பாரிய வரபிரகாசமாக செயற்படஇடுவந்ததும் அத்தளம் 2009ம் ஆண்டு 6ம்மாதத்திற்குப்பின்னர் படிப்படியாகச்செயலற்றுப்போனதோடு, தலைவரின் வீரமர செய்தியையும் வெளியிட்டிருந்தது. இதுபோன்று பல இணையங்கள் தலைவரின் இறப்புச்செய்திளை வெளியிட்டுபின்னர் அது செயலற்றுப்போய்விட்டது. ஆனால் இப்போது, ஆயிரம் இணையங்கள் முளைத்து தலையாட்டுகின்றன. இவையெல்லாம் ஒரு காரணமல்ல, தலைவரின் பெரும் நம்பிக்கை தமிழக தலைவர்களையே தங்கியிருந்தது. அவர்களே பட்டுமஇபடாமல் சுட்டும் சுடாமல் தகவலை கசியவிட்டனர் எப்படி தலைவர் இறந்தது பற்றியல்ல அவர் தொடர்பான தகவல்கள் தமக்குக்கிடைக்காது போனதையே!!!

thotuki அடிக்கடி என்னால் எழுதப்படுகின்ற எழுத்துக்களில் அழுத்தமாகக்குறிப்பிடுவது, மகிந்த ஒரு முட்டாள் அல்ல!!! அரசியலுக்குப்புதிதானவரும் அல்ல. எனவே டகைவi எழிதாக எடைபோடவேண்டாம் என்று.  திரு உருத்திர குமாரின் செய்தியினை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்… அதாவது, நாடுகடந்த தமிழீழம் அமைப்பது தொடர்பாக பல கட்டுரைகளை 2007ம் ஆண்டிலிருந்து வெளியிட்டும் தகவல்களை அறிவித்தும் வந்தேன்.  ஆனால் கலாநிதிகள் போதும் என்ற வகையில் சல்லடைபோட்டு சில கலாநிதிகளை கட்டிவைத்து அமைப்பை நடத்த எத்தணிக்கின்றார். ஒரு அமைப்பை நடத்துவதற்கே பல ஆதரவுகள் தேவைப்படும்போது பிற நாடுகளின் ஆதரவின் அநாவசியத்தை வலியுறித்தியிருந்தார். முட்டுமல்லாது, தலைவர் பட்டம்பெற்ற பட்டதாரியல்ல ஆனால் திரு அன்ரன் பாலசிங்கம் அவருக்கு லோசகராக இருந்தாரேஒழிய அவர் தலைவராக இருக்கவில்லை!!!  எனவே ஒரு அமைப்பை நடாத்துவதற்கு கற்றோர் அவசியமில்லை வேகமும் விவேகமுமே அவசியம். அத்துடன் அரசியலை நகர்த்துவதற்கு சாணக்கியம் மிக முக்கியம். அந்தச்சாணக்கியமும் வேகமும் உள்ள தமிழர்கள் தலைவருக்கு ஆதரவாக இருந்த காரணத்தாலேதான் புலிகள் இயக்கம் நிலைநின்றது.

தற்போது  தலைவரின் தகவல்கள் இல்லாததால் பல தலைவர்கள் வாலாட்டுகின்றார்கள். தலைவர் இருக்கும் போது புலிகளின் பலம் வெளியில் தெரியுமோ இல்லையோ தலைவரின் பெருமைமட்டுமே  வெளிவரும். ஆனால் இப்போது பல தலைவர்கள் திறனற்றிருந்தும் பிரபல்யமாக முனைகின்றனர். தலைவர் இருக்கும் போது வாலாட்டாதவர்கள் இப்போது தலையே ஆட்டுகின்றார்கள் என்றால் பாருங்களேன்.

புலிகளுடன் தொடர்புடையோர்கள் அனைவரும் இப்போது குத்துக்கருணம் அடித்துவிட்டார்கள், புலிகளை நம்பினோர்களை வைத்து தாமும் தம்முடைய வாழ்வையும் அலங்கரிக்க கங்கணம் கட்டுகின்றார்கள் இதுவே அப்பட்டமான உண்மை.
எனக்கு என்ன ஆதங்கம் என்றால்,   புலத்தின் தலைமைகளுக்கெல்லாம் தலைவர் இல்லை என்பது தெளிவாகத்தெரிந்தும் அதை மறைத்தே தம் வண்டியை ஓட்டப்பார்க்கின்றார்கள். அப்பேற்பட்ட தலைவனுக்கு ஒரு அஞ்சலியை செலுத்தக்கூட நல்ல தலைமை இல்லையே என்ற தாக்கம் அழுத்திக்கொண்டே இருக்கின்றது.

கிறீஸ்தவ மதத்தில், இயேசுவை இறந்ததாக எவரும் அந்நாட்களில் சொல்லவில்லை அவர் உயிர்த்துவிட்டார் நம்மிடையே வாழுகின்றார் என்றே, இன்றுள்ள மதம் ஸ்தாபிக்கப்பட்டது. அதுபோலவே தலைவரின் பெயரை வைத்து அவர் இறந்தாரோ இருந்தாரோ தம்மை திடப்படுத்தியோரின் செயற்பாடே இந்த அமைப்புக்களும் செயலற்ற செயற்பாடுகளும்.
தலைவரின் எண்ணம் தமிழீழத்தை ஒரு வல்லரசின் ஸ்தானத்திற்குக்கொண்டு செல்வதே, ஆனால் மற்றைய முதளைகளின் எண்ணமோ தலைவரின் பெயரை வைத்து தம்மை வல்லவராக்கிக் கொள்வதே…

04-01-2010-2-24-19-pm_Tamil copy முக்கிய விடயம் இந்த நாடுகடந்த அரசு சின்னாபின்னமாகக்கூடாது என்றால் ஏற்கனவே எம்மால் வெளியிட்ட அறிவுறுத்தல்களை தட்டிக்கழிக்காது கடைப்பிடிக்க எத்தணிக்க வேண்டும். … … …


இவ்வாறான தகவல்களை ஏற்கனவே கடும் போர் நடந்த சந்தர்ப்பத்திலேயே பல விடயங்களை வெளியிட்ட அருகன் தளத்தில் பல உண்மை இருப்பதை பின்னோக்கி பார்த்தீர்களேயானால் நன்கு விழங்கும். இது அருகனின் தளத்திற்கான விளம்பரமல்ல ஆனால் இவ்வாறு அருகன் தளத்தைப்போல், பல தளங்கள் உண்மைத்தளத்தை மக்கள் பார்வையிடுவதேயில்லை என்பதே வருத்தத்திற்குரிய செயல். இன்னும் வரும்…   

Nessun commento:

Posta un commento