மணலாற்றில் நடந்தது என்ன? நெஞ்சை உறையவைக்கும் உண்மை
[ ஞாயிற்றுக்கிழமை, 01 ஓகஸ்ட் 2010, 03:12.29 AM GMT +05:30 ]
கடந்த வருடம் தடைமுகாமில் இருந்து தனியே பிரித்து எடுக்கப்பட்ட போராளிகளில் தீவிரமான விடுதலைப் புலிப் போராளிகளை பிரித்து (பெண் போராளிகள் உட்பட) தனி வதைமுகாமில் அடைத்து வைத்திருந்தது அனைவரும் அறிந்த ஒன்றே. அப் போராளிகுழுவில் இருந்து ஒரு தொகுதியினரை பல குழுக்களாக பிரித்து கள சேவைக்காகவும்தேடுதல் வேட்டைக்காகவும் அவர்கள் பயன் படுத்தி வந்தனர்.
இக் குழுவில் யுத்தகளமுனையில் விழுப்புண் அடைந்து இராணுவத்தால்கைது செய்யப்பட்ட போராளிகளும் அடங்குவர்.இத் தருணத்தில் இராணுவத்தின் கட்டளைக்கு அடி பணியாத கொள்கையில் உறுதி கொண்ட போராளிகள் சிலரை இராணுவ சீருடை அணிவித்து அவர்களை நய வஞ்சகமாக கொலை செய்து விட்டு,இது புலிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையில் நடந்த மோதலாக தமிழ் ஊடகங்கள் வாயிலாக செய்திகளை மெதுவாக கசியவிடுகிறது.
மணலாற்றில் நேற்றைய தினத்திற்கு முன்பு கொல்லப்பட்டவர்களும் காயப்பட்டவர்களும் மேற்படி ராணுவத்தால் கைது செய்யப்பட்டு சித்திர வதைகலுக்கு உள்ளாகி வந்த விடுதலைப் புலிப் போராளிகளே. இத்தகவல்சரத் பொன்சேகா தரப்பிலிருந்து இருந்து கசிய விடப்பட்ட புலனாய்வு செய்தியாகும். ஜி.எஸ் .பி வரி சலுகை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து பெற்றுக் கொள்ள வேண்டுமானால் சில முக்கிய நிபந்தனைகளை ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்தது. அதில் இலங்கை அரசாங்கமானது நீண்ட காலமாக இருந்து வரும் அவசர கால சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முக்கியமாக விடுத்திருந்தது.
இதை கருத்தில் கொண்டே மேற்கண்ட மணலாற்றுச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக அறிய முடிகிறது. அதாவது, இலங்கைத் தீவில் இன்னும் பயங்கர வாதம் ஒழியவில்லை ஆகையால் அவசர கால சட்டத்தை நீக்க முடியாது என்று ஐரோப்பிய ஒன்றியம் உட்பட அனைத்து உலக நாடுகளையும் நம்ப வைக்கும் ஒரு சதித் திட்டமாகும். அரசாங்கத்தின் இச்செயலானது அரச சார்பற்ற நிறுவனங்கல் மற்றும் ஊடகவியலாளர்களின் பிரசன்னம் மற்றும் செயல்பாடுகளை மட்டுறுத்தும் நோக்கமாகவே அறிய முடிகிறது. தமிழர்களுக்கெதிராக தமிழர்களைக் கொண்டே தமிழ் ஊடகங்கள் வாயிலாக உலகுக்கு பறை சாற்றுவதே ராஜபக்ஷே அரசாங்கத்தின் சாதுர்யமாகும்.
மணலாற்றில் நடந்தது என்ன? நெஞ்சை உறையவைக்கும் உண்மை - TamilWin.com
Nessun commento:
Posta un commento