domenica 8 agosto 2010

உங்களுக்குத் தெரியுமா உங்கள் நிலை!!!!!?????

உங்களுக்குத் தெரியுமா உங்கள் நிலை!!!!!?????
இத்தாலியில் அவ்வப்போது பல சட்டமாற்றங்கள் இடம்பெறுவது சர்வசாதாரணமாகிவிட்டது. எனினும் பல வெளிநாட்டவர்கள் அச்சட்ட மாற்றங்களை குறிப்பாக தமிழர்கள் அவற்றை அறியாதிருப்பது ஒருவகை, அறிந்தும் வெளிப்படுத்தாதது இன்னொரு வகை, வெளிவந்தவற்றை அரைகுறையாக அல்லது மாற்று விபரமாக வெளியிடுவது பிறிதொரு வகை… இது இப்படி இருக்க இவ்வாறான சட்டமாற்றங்களின் பாதிப்புகளை உணராமலேயே பலர் காலத்தைக்கடத்துகின்றனர். இதனால் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதிலும் பார்க்க நன்மைகளைக்கூட பெற்றுக்கொள்ளாது சட்டம் மாற்றத்திற்குள்ளாகிழவிடுகின்றது. எனவேதான் அவ்வப்போது என்னால் முடிந்தளவு எனது இணைய வாசகர்களுக்காகவும் என்னிடம் தமது தேவைகளைப் பூர்த்தி செய்ய முனைவோர்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் எனது சேவைகளை மேற்கொண்டு வருகின்றேன். இந்தவகையில், தற்போது புதிய நடவடிக்கையினை எடுத்துள்ளேன். அதுவாகில், பல வருடங்களாக இத்தாலியில் தொழில் புரிந்தும் தாம் எவ்வளவு தொகை தமது ஓய்வூதியப்பணத்தை அரசிடம் வழங்கியுள்ளார்கள் என்பதனையும் அதுதொடர்ர்பாக எடுக்க வேண்டிய மற்றைய ஒழுங்குகளையும், இன்னும் தொழில் வழங்குனர் தொடர்பான பரிசீலனைகளையும் பெற்று அதற்கேற்ப உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியம் பலருக்குப்புரியாது போய்விடுகின்றது. எனவே இது தொடர்பான பரிசீலனைகளை மேற்கொள் தேவை ஏற்படின் தொடர்பு கொள்ளவும்…

அலுவலக மெயில் தொடர்புகளுக்கு arugan@live.com;

அரசாங்க அலுவல்களுக்கு மட்டும். :- maximin.francis@PostaCertifica.gov.it

Nessun commento:

Posta un commento