giovedì 19 agosto 2010

சிவந்தனை வரவேற்கத் தயாராகும் சுவிஸ் வாழ் தமிழ் மக்கள்!/ சிவந்தனின் நடை பயணத்திற்கு செலவாகும் பணத்தினை வன்னி மக்களுக்கு கொடுத்தால் உதவியாகும்!! (nanri inaiyankal)

 சிவந்தனை வரவேற்கத் தயாராகும் சுவிஸ் வாழ் தமிழ் மக்கள்!/ சிவந்தனின் நடை பயணத்திற்கு செலவாகும் பணத்தினை வன்னி மக்களுக்கு கொடுத்தால் உதவியாகும்!!

 

ஈழத் தமிழருக்கு நீதி வேண்டும் என்று கோரி பிரித்தானிய தலைநகர் லண்டனில் இருந்து சுவிற்சலாந்தின் தலைநகர் ஜெனிவாவில் அமைந்திருக்கும் ஐ.நா மனித உரிமைகள் சபையை நோக்கி மனம் தளராத உறுதியுடன் சிவந்தன் இன்றோடு 27 வது நாளாக நடை பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும். போன்ற வலுவான கோரிக்கைகளை முன்வைத்தே சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

மலைப்பாங்கான பிரதேசங்களில் சிவந்தன் நடந்து செல்வதால், நேற்று சுவிற்சர்லாந்து எல்லைக்குள் சென்ற போதிலும், மீண்டும் பிரான்ஸ் நாட்டிற்குள் சென்று ஜெனீவா நோக்கி பிரான்ஸ் நாட்டிற்குள்ளாக நடந்து செல்லுகின்றார்.

நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10:00 மணியளவில் மீண்டும் சுவிஸ் எல்லைக்குள் பேர்லி (Perly) என்ற இடத்தில் சிவந்தன் நுழையும்போது, அவருக்கு பாரம்பரிய இசைமுழங்க, நாட்டியங்களுடன் செங்கம்பள வரவேற்பு அளிக்க சுவிஸ் தமிழ் அமைப்புக்களும், தமிழ் சமூகமும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ளன.

சிவந்தனை வரவேற்கத் தயாராகும் சுவிஸ் வாழ் தமிழ் மக்கள்! (காணொளி மற்றும் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) 

சிவந்தனின் நடை பயணத்திற்கு செலவாகும் பணத்தினை வன்னி மக்களுக்கு கொடுத்தால் உதவியாகும்!!

நடைபயணம்,   ஊர்வலம், உண்ணாவிரதம். தீக்குளிப்பு, அமைதிப்பேரணி, சாவிலும் எழுவோம், அலைகடல் போல் எழுவோம், குதித்து எழுவோம், ஓயமாட்டோம் என பல்வேறு வகையான போராட்டங்களை போர் முடிவடைவதற்கு முன்னரான கடைசி 3மாதங்களில் தலைவரையும் தலைவரின் போராட்டத்தையும் தக்கவைத்துக் கொள்வதற்காக புலம்பெயர் புலியாதரவாளர்கள் மேற்குலக நாடுகள் முழுவதும் நின்று போடாத கூத்துக்களும் ஆடாத ஆட்டங்களும் இல்லை

30வருடகால போராட்டதில் முவாயிரத்திற்கு மேற்பட்ட தடவைகள் எதாவது ஒரு பெயரில் ஊர்வலமாக ஜெனீவாவில் உள்ள ஐ.நா.சபைக்கு முன்னால் புலிக்கொடியுடனும், தவைரின் படத்துடனும் போய்நின்று எங்கள் தலைவர் பிரபாகரன், ‘வீவோண்ட் தமிழீழம்’ என கத்தி பல கோரிக்கைகளை ஐ.நா. சபையினரிடம் முன்வைத்தார்கள்.

இவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை ஐ.நா.சபையினர் இந்த 30வருட காலத்தில் என்றுமே ஏற்றுகொள்ளவுமில்லை ஆகக்குறைந்தது உங்கள் கோரிக்கைகளை நாங்கள் பரிசீலனைக்காவது எடுத்துக்கொள்கின்றோம் என்றாவது எப்பொழுதுமே கூறியதில்லை.

பின்பு, கடைசிகட்ட போர் நடைபெற்றக்கொண்டிருந்த போது 3மாத காலமாக ஏறக்குறைய ஒட்டுமொத்த சுவிஸ் வாழ் தமிழர்களையும் அழைத்துகொண்டு ஐ.நா.சபை முன்பு போய் நின்று சனத்தை சிங்கள இராணுவம் படுகொலை செய்வதாகவும், அதனால் சனத்தை சிங்கள படையினரிடமிருந்து காப்பாற்றி பிரபாகரனிடம் அந்த சனத்தை ஒப்படைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதற்கு (கொஞ்சம் கொஞ்சமாக தமிழனை அழிப்பதற்கு) வழிவகை செய்யவேண்டும் என ஐ.நா.சபையினரிடம் கோரிக்கை முன்வைத்தார்கள்.

இதை ஐ.நா.சபையினர் தெளிவாக புரிந்துகொண்டு கொஞ்ச சனம் அழிந்தாலும் பறவாயில்லை 30வருடமாக இலங்கைத் திருநாட்டில் தலைவிரிதாடிய   பயங்கரவாதத்தை எனிமேலும்   விட்டுவைக்க முடியாது என்பதால் மறைமுகமாக மேற்குலகத்தினர்கள் முடிந்தவரை புலிகளை அழிப்பதற்கு உதவினார்கள்.   அதற்கு பிறகு புலியாதரவாளர்கள்   ஜ.நா.சபை பக்கமே போவதில்லை.


புலியாதரவாளர்கள் புலிக்கொடியுடன்   ஐ.நா.சபைக்கு முன்னால போனாலே ஐ.நா.சபைக்காரர்கள் முகம் சுழிக்க வெளிக்கிட்டிருவார்கள்.   காசுக்காக   புலிகளை ஆதரித்த சுவிஸ்,   நோர்வே    நாடுகளை சில தவிர கனடா,   பிரித்தானியா,    ஜெர்மனி,    பிரான்ஸ்… போன்ற நாட்டினர்களுக்கு புலிக்கொடியை கண்டாலே அலர்சியாகிவிடும்.      முக்கியமாக ஜெனிவா நகர் வாழ் சுவிஸ் மக்களுக்கு இந்த புலிகொடியுடன் திரியும்   கூட்டங்களை கண்டாலே,    பயணம் செய்யும் போது  பூனை குறுக்கால   போறமாதிரி  பார்ப்பார்கள்.

புலிகள் இலங்கையில் மே மாதம் 18திகதி அழிக்கப்பட்டதோடு    அந்த நிலமை முற்றாக மாறிவிட்டிருந்தது.     ஜெனிவா வாழ் மக்கள் நிம்மதியாக பயணம் செய்தார்கள்.   இப்பொழுது மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியுள்ளது.   லண்டனிலிருந்து சிவந்தன் என்ற பூனையோடு (புலிகள்) சேர்ந்து இன்னும் கொஞ்ச பூனைகள் ஜெனீவா நகருக்கு குறுக்கால போவதற்கு வந்துகொண்டிருக்கிறார்களாம். அதுவும் புலிக்கொடியுடன் வருகிறார்களாம்.

சிவந்தனின் நடைபயணத்தை நாம் கொஞ்சம் உற்றுநோக்குவோமானால் இந்த நடைபயணத்தின் நோக்கம் என்னவென்பது புரியும்.    அதாவது இந்த மாதரியாக   புலியாதரவாளர்கள்  செய்யும்   நடவடிக்கைகள்     யாவும் தங்களுக்கு     தமிழ் மக்களிடையே ஒரு publicity  யை தேடுவதும்,    பதுக்கி வைத்திருக்கும்   புலிகளின்    காசுகளை   தங்களின்    உல்லாச நடவடிக்கைகளுக்கு செலவழிப்பதுமே தான் இவர்களின் குறிக்கோளாகும்.

இதை தவிர இவர்கள் வேறெதையும் சாதிக்கபோவதில்லை.


சிவந்தனின் நடை பயணத்தை நாம் அவதானித்த வரை இது ஒரு சுற்றுலா நடவடிக்கையாகவே இதை பார்க்க கூடியதாக உள்ளது. சிவந்தன் ஒவ்வொரு நாளும் புதிது, புதிதாக உடையுடுத்திக்கொண்டு, இரவில் நல்ல உல்லாச விடுதிகளில் தங்கிக்கொண்டு, வடிவாக குடித்து சாப்பிட்டுக்கொண்டு வரும் வழிகளில் நல்ல இடங்களையும் பார்த்து ரசித்துக்கொண்டு வருகிறார்.

எங்கெங்கு தங்கவேண்டும்,  எந்தெந்த இடத்தில் நடக்கவேண்டும், எந்தெந்த இடங்களில் துர்ங்கவேண்டும் என்பதெல்லாம் ஏற்கனவே ஓழுங்கமைக்கப்பட்டபடியே சிவந்தனின் நடையோடு நடைபெற்று வருகின்றன.   இவரின் இந்த நடைப்பயணத்துக்கு ஆதரவளிப்பவர்கள் நாடுகடந்த அரசமைபினராகும்.

கிட்டதட்ட   1000கிலோமீற்றர்கள் நடைபயணமாக வருபவர் எப்படியிருப்பார் என்ன மாதிரியான உடல்நிலையில் இருப்பார் என்பதனையும், சும்மா ஊரை பேய்காட்டுவதற்காக நடந்துவருபவர் எப்படியிருப்பார் எப்படியான உடல்நிலையில் இருப்பார் என்பதனையும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோ காட்சிகளை நீங்கள் ஒருமுறை கண்ணுற்றால் நான்சொல்லுவது உண்மையா அல்லது பொய்யா என்பதை புரிந்துகொள்வீர்கள்.

ஒருவிடயம் தெளிவானது. இந்த புலிக்கொடியை தூக்கிகொண்டு யார் எந்தனை மைல்கள் நடந்து அல்லது தவண்டு போய் ஐ.நா.சபை முன் போய்நின்றாலும் எதுவும் நடக்கவோதில்லை.       இப்படி வீணாக செலவழிக்கும் காசுகளை சிவந்தன் கொண்டுபோய் வன்னியில் உள்ள மக்களுக்கு கொடுத்தால் பெரிய புண்ணியமாக இருக்கும்.

சிவந்தனின் இந்த நடைபயண காணொளியை நீங்கள்கொஞ்சம் கண்ணுற்றால் நான் மேலே கூறியவிடயங்கள் எந்தளவு உண்மை என்று உங்களுக்கு புரியும்.

http://www.youtube.com/watch?

Nessun commento:

Posta un commento