venerdì 14 maggio 2010

தமிழர்களின் "சாகடிக்கப்பட்ட சரித்திரத்தை" வெளிக்கொணர ஒரு சந்தர்ப்பம்...

தமிழர்களின் "சாகடிக்கப்பட்ட சரித்திரத்தை" வெளிக்கொணர ஒரு சந்தர்ப்பம்...

Arugan கடந்த கால தமிழினப்பேரழிவுகளுக்ககெதிராக எமது UNGA ஒன்றியமானது பல்வேறு பிறநாட்டு அமைப்புக்களுடனும், அரசுடனும் இணைந்து ஏராளமான விழிப்புணர்வுகொண்ட அனால் சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுத்தமை யாவருக்கும் தெரிந்திருக்கும் என்பதில் அர்த்தமில்லை!!!.

காரணம், தமிழின அமைப்புக்கள் தாம் நினைப்பதை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்று எண்ணுகின்றார்களே ஒழிய, சரியான திட்டங்களின் மூலம் தமிழினத்திற்கெதிரான “இலங்கை அரசின் போக்கை கண்டிக்க” தம்மைத்தவிர பிறரால் வழங்கப்படுகின்ற அறிவுரைகளையும், ஆலோசனைகளையும், அரசியல் சாணக்கியத்தையும் பயன்படுத்துவோரையோ அல்லது பயன்படுத்தத்தகுதியுடைய அமைப்புக்களை முன்நிறுத்தியதோ அல்லது அவர்களுடன் பேச்சுக்களை நடத்தியதோ கிடையாது.

தம்முடைய கருத்திற்கு எதிராக மிகச்சிறந்த கருத்துக்கள் கிடைத்தாலும், அதனை முதலில் நிராகரித்து “மாற்றுக்கருத்துக்காரர்கள்” என்று ஓரங்கட்டிவிடுவார்கள். இவ்வாறான காரணங்கள் எம்மை எமது இனத்திற்குள்ளே பல்வேறு பிரிவுகளை ஏற்படுத்தியதோடு, பெரும் அழிவையும் மீளமுடியாத அளவிற்கு இழப்பையும் ஏற்படுத்தியது என்றால் அது வரலாறு.

அந்தவகையில் தமிழர்களுக்கான எத்தனையோ மேம்பாடுடைய திட்டங்களை மேற்கொண்ட எமது UNGA ஒன்றிய அமைப்புப்பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். “அடிப்படையில் இருக்கின்ற நாற்றத்தைக்களைந்தால்த்தான் வீடு முழுதும் சுத்தமாக வாய்ப்புண்டு. வீட்டைத்துப்பரவு செய்வதாகச்சொல்லி வாசல்ப்படிகளை அழுக்காக வைத்திருந்தால் உள்ளே வருகின்றவர்கள் அதிலிருந்து பல நாற்றத்தை மீண்டும் மீண்டும் உள்ளே கொண்டர்ந்துவிடுவார்கள் இல்லையா... இப்போது தமிழர்களுக்காதரவாக கோரிக்கை விடுவது மட்டும் எமது போராட்டமல்ல அதனைத்தீர்த்துவைக்கவும் நாம் துணைநிற்கவேண்டும். அப்போதுதான் வீழ்ந்த தமிழர்கள் எழுந்து கொள்வார்கள் என்ற சாணக்கியத்தை நாம் ஆரம்பத்தில் இருந்து கையாள்வதோடு, இலங்கை அரசின் தவறுகளை அடிப்படையில் இருந்து களைய எத்தணிக்கின்றோம்.”  எனினும் தமிழர்களின் தொடர்பாக நாம் எடுக்கும் எந்தக்காரியத்தையும் அவர்களின் நீதியான நியாயமான உரிமைகள் கிடைக்குமட்டும் ஓயப்போவதில்லை! என்ற நோக்கில் வருகின்ற 23ம் திகதி எமது மக்களின் பேரவலத்தை இத்தாலி வாழ் அனைத்து சமூகத்திற்குக் கொணரும் நோக்குடன் விழிப்புணர்வை பல இனத்தாருடன் சேர்ந்து மேற்கொள்ள விருக்கின்றோம். எனவே, இத்தாலியில் இருக்கும் தமிழின ஆதரவாளர்கள் கலந்த கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். எம்மால் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் அணைத்தும்எமது http://arugan.spaces.live.com இணையத்தில் வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வாகனத்தரிப்பிற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இடம் மற்றும் அனைத்துத்தகவல்களும், இணைந்து செயற்படும் அரச சார்பற்ற அமைப்புகளின் பெயர்களும், அரசசார்புடைய அமைப்புக்களின் விபரங்களும் உள்ளடங்கிய குறிப்பிடப்பட்ட விளம்பரசான்றிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.  (இங்கே அழுத்தவும்)

மேலதிகத்தகவல்கள் தேவைப்படுவோர் எம்முடன் தொடர்பு கொள்ளவும்.  - 00393204031624.  

இணைந்து செயற்படும்

Associazione Gli angeli del mondo
Associazione Nigeriana Reggio Emilia e provincia
Associazione Bourkinabè del comune di Zonsè in Italia
Associazione cittadini del Burkina-Faso di Reggio Emilia e Emilia Romagna (A.B.R.E.E.R.)
Associazione culturale cinese
Associazione Ivoriani di Reggio Emilia
Associazione Culturale Stranieri Nord,Sud,Africa,Asia
Associazione Generazione Articolo 3 (G.A. 3)
Associazione Provinciale Senegalese
Associazione Provinciale Egiziana
Associazione studenti non comunitari di Reggio Emilia (A.S.N.O.C.R.E.)
Associazione cittadini Moldavi in Italia
Casa della Cultura Islamica di Reggio Emilia
Circolo Sociale Culturale Comunità islamica di Reggio Emilia
Comunità egiziana di Montecchio
Giovani con uno scopo
The Latter Glory Ministries International (Comunità Cristiana Evangelica Internazionale)
Lega Islamica femminile europea (L.I.F.E.)
Organizzazione di amicizia e cooperazione Italo-marocchina
TNGA - Associazione della nuova generazione Tamil (தமிழ் அமைப்பு )
UNGA - Unione della nuova generazione (பெரும்பான்மைத் தமிழர்களால் நடாத்தப்படும் ஒன்றியம். )
Centro Islamico - Moschea di Reggio Emilia
Associazione Ucraini in Italia di Reggio Emilia
Ghanian National Association
Giovani Mussulmani d’Italia - sezione di Reggio Emilia
Associazione culturale “Africa Sunrise"

அரசசார்புடைய

w2

தகவல் UNGA சார்பில் அருகன்.

Nessun commento:

Posta un commento