தமிழர்களின் “தூக்கத்திலும்”, “துக்கத்திலும்” சிங்களம் விழித்துக்கொள்கின்றது… – பாகம்1 (பாகம் ஒன்றை வாசிப்பதற்கு இதனை அழுத்தவும். )
“இலங்கை அரசு அழிக்கவும், மறைக்கவும் நினைக்கும் இலங்கைத் தமிழ் வரலாற்றின் பக்கங்களும், தமிழர்களை அழிவுபாதைக்குக் கொண்டு சென்ற தமிழர்களின் வரலாற்றின் பக்கங்களும்...” தொடர் பக்கங்கள்....பாகம்2
சிங்களவர்களின் காலத்திற்கு முற்பட்ட காலத்திலேயே தமிழர்கள் இலங்கையில் இருந்தார்கள் என்பதற்கும், அவர்கள் இலங்கையினை ஆண்டார்கள் என்பதற்கும் சான்றுகள் உள. ஆயினும் சிங்களவர்கள் தமது வரலாற்றைத் தக்கபடி நிலைநாட்டிக்கொண்டார்கள். தமிழர்கள் நாமோ, அதனை அன்னியன் கையில் கொடுத்துவிட்டோம்.
இன்று தமிழர்களின் ஆரம்ப வரலாற்றை விளக்குவதற்கு சிங்களவனின் வரலாற்று நூலாகக்கருதப்படுகின்ற “மாகாவம்சம்” “சூழவம்சம்” என்ற வற்றை நாடும் அளவிற்கு துர்ப்பாக்கிய சாலிகளானோம். ஆயினும் வேறு பல ஆதாரங்களும், வரலாற்றுச்சம்பவங்களும் எமது தாயகம் தொடர்பாகவும் தன்னாட்சிதொடர்பாகவும் அது காலத்துக்குக்காலம் அயலானிடம் பறிபோயும், வஞ்சகவலைகளால் சிதைவுற்றும் சின்னாபின்னம் ஆக்கப்பட்டதும் தெளிவுறத் தெரியும் அளவிற்கு பின்னுள்ள பகுதி கைகொடுக்கும்.
தமிழ் அரசர்கள், யாழ்ப்பாணத்து அரசர்கள், இலங்கை அரசர்கள்… என்று பார்க்கும் போது, இந்தியாவின் பங்களிப்பு தற்போதண்றி ஆரம்ப காலத்தில் இருந்தே பிரிக்கமுடியாததாக இருக்கிறது. விஜயனின் வருகைக்கு முன் ஒரு பாரியச் சிதைவொன்று (சுனாமியைப்போன்று) இலங்கையில் இடம்பெற்றுள்ளது. அச் சிதைவினால் இலங்கைப் பழங்குடி தமிழர்களின் அடியான நாகர், இயக்கர், கின்னரர் போன்றோர் சிதைவடைந்தும் சிறு அளவிலும் குறைக்கப்பட்டிருக்கின்றனர். இதனால் தொகையில் சிறுமைப்பட்டிருந்த பழங்குடியினர் பெரும்பாலானோருடைய தாக்கத்திற்கு முகங் கொடுக்கமுடியாது அவர்கள் வரலாறு புதைக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது, அச்சமுகத்தில் இருந்து விலகியிருக்கப்பட்டிருக்க வேண்டும்.
இலங்கையில் (வடபகுதி) யாழ் ஆட்சியாளரின் ஆரம்பம் பொதுவா “கூழாங்கைச் சக்கரவர்த்தி” என்பவனோடு ஆரம்பிக்கிறது. ஆனால், அதற்குமுன் இலங்கை அரசாட்சியில்லை என்று சொல்வதற்கில்லை. வரலாற்றில் வெளிப்படவில்லை என்பதற்கான ஆதாரம் மேலே தெளிவு படுத்தப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம், பெரும்பாலும் தமிழர்கள் பழங்குடியினராகக் காணப்பட்டமையும் சிதைவுக்குள்ளாக்கப்பட்டமையுமாகும்.
இவ்வரசனுடைய ஆட்சி தொடர்பாக சில கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றது. அதற்குமுதல் யாழ்ப்பாணத்தின் வரலாறு தொடர்பாக சிலவிடையத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஆழமாகத்தெரிந்து கொள்ள அதனைப் பிறிதொரு இடத்தில் பார்ப்போம். யாழ்ப்பாணம் ஆரம்பத்தில், “மணல்த்திடர்” என்றும் “மணற்றிடர்” என்றும் அழைக்கப்பட்டது. பின்னர், யாழ்ப்பாணன் என்பவனுக்குரியதாக மாறியதன் காரணத்தால் அது யாழ்ப்பாணம் என்று பரினாமமானது. இதனுடைய உரிமையாளரான யாழ்ப்பாணன் இந்தியாவில் இருந்து அரச பரம்பரையில் உள்ள ஒருவரை அழைத்து அதனை ஆளவைத்தாராம்.
மேற்சொன்ன இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. காரணம் அக்காலத்தில் ஒருவருக்கு ஒரு இடம் சொந்தமென்றால் அதற்குச் செந்தக்காரனே அரசன். அப்படியிருக்க இன்னொரு அரசனை உருவாக்க அவசியமென்ன? மேலும் இன்று சொல்வது போலல்லாமல், இந்தியத் தொடர்புடைய அரசு மேலும் இந்தியாவை உறவுள்ளதாக மாற்றியிருக்குமே தவிர, குறைத்திருக்காது. இன்னொரு விடையத்தை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலான தமிழ் வரலாறு (இலங்கைத்தமிழ்) பிற மொழிகள் மூலமே விபரிக்கப்பட்டது. அதன் விம்பமே பெயர்கள் மாற்றப்பட்டும் வரலாறு மறைக்கப்பட்டும் உள்ளது. உதாரணம் “இயேசுக் கிறீஸ்து” “ஜீசஸ் கிறைஸ்ட்” “யேசு நாதர்” என்பன ஒரே ஆளைக் குறிக்கிறது. பெயர் எக்காரணங் கொண்டும் மொழிமாற்றத்திற் குட்படக்கூடாது!!! அது போலவே இடமும்.
உண்மையிலே ஒரு சம்பவம், “ஒருவருடைய பெயர் தமிழில் “செபமாலை” அவர் தனது பெயரை வெளிநாடு சென்றதும் தன்னை “றொசாறியோ” என்று அறிமுகப்படுத்தினார் இப்போது அவரை முன்பு அறிந்தவர் பின்பு அறிந்தவர் என்று இருபகுதி காணப்படுகிறது. பாவனையில் இருக்கும் இருபெயரும் கருத்தில் ஒன்று என்பதற்காக அது சரி என்று ஒப்புக்கொள்ளலாமா? இவ்வாறான சிக்கல்களே வரலாறு மங்கியதற்கும் பிறிதாக்கப்பட்டதற்கும் காரணமாகும்.
தற்போது சிங்களவர் என்று சொல்வோர் கூட தனிச் சிங்களவர் இல்லையே! இணைப்புச் சிங்களவர். எனது ஒன்று விட்ட சகோதரிகள் யாழ்ப்பாணத்தில் எம்முடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த போது அசல் தமிழர்கள். பின்னர் இடம்பெயர்ந்த காலத்தில் வவுனியாவில் அவர்கள் அசல் சிங்களவர்கள். காரணம் அவர்களுடைய தந்தை தமிழ் நன்றாய்ப்பேசக்கூடிய அசல்ச் சிங்களவர் எனவே அவர்கள் பச்சோந்தியிலும் மேலானமுறையில் காணப்பட்டனர்.
காரணமும் இதற்குத்தடையாக அமைந்திருக்கலாம்.
உதாரணம், ஆங்கிலேயரின் வருகைக்கு முன்னர் நமது கணிப்பீடுகள்… போத்தல், றாத்தல், கட்டை, சாண்,… அதற்குமுன்னர் ஒருபாதம் இருபாதம், ஒருகாததொலைவு, … இவ்வாறான கணிப்புகள் இருந்தன அவற்றின் கணிப்பிற்கும், தற்போதைய கி.மீ, லீற்றர், கி.கி., மீற்றர், போன்ற கணிப்பிற்கும் பாரிய மாற்றங்கள் உள்ளன. மேலும் அக்கால எழுத்தாளர்கள், தமது எழுத்துக்களில் ஒருசிலரைக் உருவாக்கியும், தேவைப்படும் இடத்தில் தாமே அந்த சம்பவத்தில் புகுந்தும் (ராமாயணத்தில்-வேதவியாசர், வசிஷ்டர்) வரலாற்றைப்புனைவதற்கு இலக்கணம் இடங்கொடுத்தது. எனவே வரலாற்று ஆவணங்களையும், ஆதாரங்களையும் சற்று எமது எண்ணத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இலங்கையின் சரித்திரம் என்று பார்க்கும் போது, முற்காலத்தில்
- மயன்,
சுரேந்திரன்,
அசுரேந்திரன்,
இச்சயம்பன்,
யாளிமுகன்,
ஏதி,
வித்துகேசன்,
சுகேசன்,
மாலியவான், (இலங்காபுரி என்னும் பெயர் இவன்காலத்தில்
உதயமானதெனலாம்),
சுமாலி, (சூரியப் பிரகாசம் விமானம் இருந்த காலம்) ,
வச்சிரவாகு,
வைச்சிரவாணன்(குபேரன் புட்பக விமனமம் வைத்திருந்தான்),
குபேரன்
இராவணன்
விபீஷணன் (பசுபதி)
இந்திரஜித்
ஆதிசகாயன்
… …
போன்ற வரலாற்று நபர்களையும் புரட்டிப்பார்க்க வேண்டும். இவர்கள் வெறும் கதாபாத்திரமல்ல. அத்தோடு எல்லாளன் சரித்திரம் கி.மு. 205- 161 என சிங்கள மிகப்பெரிய வரலாற்றுப் புத்தகமான மகாவம்சம் எடுத்துக்காட்டும் வரலாறு எங்கே போனது? துட்டகைமுனு என்னும் மன்னனால் எல்லாளன் கொல்லப்பட்டதும் எல்லாளனுடைய சமாதியின் இடத்தை (தகனம்செய்த) மரியாதைக்குரிய இடமாக தூபி அமைத்து, அனுசரித்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது ஆனால் காலப்போக்கில் சிங்கள இனவாத சமுகம் அதனை மாற்றி அமைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.(ஆதாரம் மகாவம்சம், "The Pali Literature of Ceylon"p.34 ).
யாழ்ப்பாணத்துச் சரித்திரம் என்று பார்க்கும் போது சரித்திரத்தில், கூழாங்கைச் சக்கரவர்த்தி என்பவனில் இருந்து ஆரம்பிக்கிறது. ஆனால் அது முற்றுமுழுதாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம் அதற்குமுதல் வரலாறுகள் (மேற்குறிப்பிட்டவர்கள்) வெளிவராமல் போனதும், மக்கள் தொடர்பு குறைந்து காணப்பட்டதும், பலங்குறைந்து காணப்பட்டதும் காரணமாக இருந்திருக்கலாம். அதன் விபரங்கள் புராணங்கள் மூலம் நாம் புடம்போட்டுக் காட்டக்கூடியதொன்றாகும். இந்த இலங்கையானது, “இராவணனின் இராஜதானியாக விளங்கியது. விசுவ கர்மாவினால் நிர்மாணிக்கப்பட்டது. இது தென் சமுத்திரத்திலே திரிகூட பர்வதத்திலே அமைக்கப்பட்ட பட்டணமாகும்” என்று வரலாற்று ஆசிரியர் ஒருவர் குறிப்பிடுகிறார் என்பதை மேலே எடுத்துக்காட்டினேன். இந்த அரசானது ஆரம்பத்தில் “மால்யவானுக்கு” இராஜதானியாக இருந்தது. காலப்போக்கில் பெரும் செல்வந்தராக விளங்கிய குபேரனுக்கு இராஜதானியாக அமைந்து அதன்பின், பெரும் பலம் கொண்டவனும், வரம் பெற்றவனுமான இராவணனால் அபகரிக்கப்பட்டது.
இந்த இராவணனின் தம்பிகளுள் ஒருவன் விபீசனன். வசிர வசுவுக்கு கையேசியிடத்தில் பிறந்த மூன்றாவது புதல்வன். இந்த
விபீசனன், இராவணன் சீதையைக் கவர்ந்து வந்த போது, சீதையை மீண்டும் இராமனிடத்தில் கொண்டு போய் விடும்படி பலமுறை பலவகையில் எடுத்து உரைத்தவன். ஆனால் இவனுடைய எந்தப் பேச்சுக்களுக்கும் தமையனான இராவணன் செவி கொடுக்கவில்லை! இராவணனின் தவறைச் சுட்டிக் காட்டி எந்தப் பிரதிபலிப்பையும் அறியாத விபீஷனன், தன் தமையனை விட்டு விட்டு, இராமனிடம் போய்ச் சரணாகதி அடைந்தான். இராமனும் அவனுக்கு அபயம் அளித்தான். இராவணனைச் சங்காரம் செய்து அழித்தபின்னர் இந்த விபீஷணனுக்கு இராவணனின் அரசாக இருந்த இந்த இலங்காபுரி என்னும் ஈழமண்டலத்தை உரிமையாக்கி, அவனை அரசாளச் செய்தார் இராமர். (இது தொடர்பாக ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன் தொடர்பு கருதி மீட்டுள்ளேன்) இந்த விபீஷணன் (சிலர் வேறு அரசனைக் காட்டுகின்றனர்) அரசாண்ட காலத்தில் அவனது சபையில் “யாழ்”வாசித்து அவனை மகிழ்வித்த “பாணன்” ஒருவனுக்கு தனது அன்பளிப்பாக “மணற்தீடை” என்ற பரப்பை வழங்கினான்.
அது காடு நிறைந்த பகுதியாகக் காணப்பட்டது அதன்பின்னர் அப்பகுதி “யாழ்ப்பாணம்” எனப்பெயர்பெற்றது. இதன்கால வரைகள் நிற்சயித்துக்கூறமுயாது உள்ளது. எனினும் இக்காலத்தில் மக்கள் இந்தியாவில் இருந்தும் சிலர் விஸ்தரிப்புக் காரணமாக வந்து குடியமற்றப்பட்டார்கள் என்பது வரலாறு. மக்கள் அதிகரிப்பின் பின்னர் பதிவுகள் வரலாற்றில் வெளிப்படதொடங்கியது. அதன்படி வெளிப்பட்ட அரச வம்சங்களாக... கூழாங்கைச் சக்க்கரவர்த்த்தி (கோளுறு கரத்துக் குரிசில், கூ.ஆரியச்சக்கரவர்த்தி ) இலங்கையில் பொதுவாக பலசிற்றர்கள் இருந்தும் யாழ்ப்பாணத்தை பெற்ற யாழ்ப்பாணனின் காலமுடிவில் அவன் தனக்குப்பின் யாழ்ப்பாணத்தை ஆழ பிரபல்யாமன வரலாறுகளின் தோற்றப்படி, இவ்வரசன் இந்தியாவில் இருந்த அழைக்கப்பட்டதாகவும், தசரதனின் மைத்தினனின் வம்சாவழித்தோன்றலில் ஒருவன் என்றும், சோழ வம்சத்தில் ஒருவன் என்றும், சிக்கல்ப் படுத்துகின்றனர்.
இன்னும் சிலர் 11ம் நூற்றாண்டளவில் இரஜேந்திர சோழனின் படையெடுப்பில் ஆரம்பித்தது என்றும், 13ம் நூற்றாண்டில் கலிங்கச் சக்கரவர்த்தியின் போரெடுப்பில் உதயமானதென்று சிலரும், மட்டுமல்லாது, “பாண்டிவளவன்” என்றொருவன் யாழ்ப்பாணப்பகுதி தகுந்த அரசாட்சி இல்லாததால் அண்மையில் உள்ள பெருந்தேசத்தில் இருந்து ஒருஅரசனை அழைத்ததாகவும், இன்னொரு பக்கம் செல்லப் படுகிறது. மேலும், தமிழ்ப் படைகளின் உதவியுடன், பெருங்கூட்டு ஆட்சிநடத்திய சிங்களவருடன் அப்போதைய தலைநகரான பொலநறுவையை கலிங்கத்து சக்கரவர்த்தி போர் செய்து, அவன்மூலம் தனி ஆட்சி நடத்தப்பட்டதாகவும், தனது பெயரை யாழ்ப்பாணத்தின் ஆட்சிக்காக “கூழாங்கைச் சக்கரவர்த்தி என்று பெயரிட்டு ஆண்டதாகவும் சுவாமி ஞானப்பிரகாசர், மற்றும் செ.இராசநாயகம் போன்ற அறிஞர்கள் கருதுகிறார்கள்.
எனினும் அக்காலத்திற்கு முன்னிருந்தே ஆட்சிகள் நிலவியது என்பது இதில் இருந்து தெரிகிறது. இவனது காலக்கணக்கு 13ம் நூற்றாண்டுகள் என்பதே தற்பொதைய கணிப்பீடாகும். இக்காலப்பகுதியில்தான் நல்லூர் இராசதானி கட்டப்பட்டதனால், இவ்வரசனே அனைத்து அரச திட்டங்களையும் யாழ்ப்பாணத்துக்கென அமைத்திருக்கிறான் என்று எடுத்துக்கொள்ள முடிகிறது.
எனினும் நல்லூர் மேலும் மெருகுபடுத்தப்பட்டது 15 நூற்றாண்டுகளுக்குப் பின்னரே. காரணம் யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னர்கள் (புலிகள் உட்பட) பொதுவாக இப்பிரதேசத்திற்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்தமையாகும். இவ்வரசனின் பின்னர் “குலசேகர சிங்கையாரியன்” 10 வருடகாலமாக அதாவது கி.பி 1246ல் இருந்து 1256 வரை யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்தான். இவன் கூழாங்கைச் சக்கரவர்த்தியின் மகனாவான். இவன் நாட்டில் பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகளை ஏற்படுத்தி அபிவிருத்தியைத் தூண்டுவிக்கும் பொருட்டு விவசாயத்தைப் பெருக்கினான். பின்னர் இவனுடைய குமாரனான “குலோத்துங்கசிங்கையாரியன்” ஆட்சியமர்ந்து தந்தை வழியில் நாட்டை விருத்தி செய்தான். .. தொடரும் அருகன்.
Nessun commento:
Posta un commento